Thursday, December 31, 2020

ஆங்கிலப் புத்தாண்டு 2021 வாழ்த்துகள்

 Status 2021(1)

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். உலகத்தையே உலுக்கி பல இடர்பாடுகளை நாம் சந்தித்த 2020-லிருந்து விடைபெறும் இந்த நன்னாளில் இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நமக்கு நல்வாழ்வையும் புத்துணர்ச்சியையும் அளித்து குடும்பத்தில் குதூகலம் பொங்கவும் அனைத்து இன்னல்களில் இருந்தும் நம்மை காப்பாற்றவும் வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இந்த ஆங்கிலப் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்போம். புது யுகத்தை எதிர்பார்ப்போம். நல்லதையே நினைப்போம். புதுப்பொலிவுடன் இந்த இனிய புத்தாண்டில் வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்.

Victory King (VK)

Wednesday, December 30, 2020

அன்பும் பண்பும்!

 Status 445

உதவியவரை ஒரு போதும் மறக்காதே! உன் மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே! நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே!

விவேகானந்தர்

முத்தான இந்த பொன்மொழியை முக்கியமாக சுயநலக்காரர்கள் கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இதை நாம் அனைவருமே பின்பற்றி பண்புக்கு இலக்கணம் வகுப்போமே!

Victory King (VK)

Tuesday, December 29, 2020

ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி செய்வோம்!

 Status 444 

ஆரோக்கிய வாழ்விற்கு பணம் புகழ் ஆடம்பர வாழ்க்கை அறுசுவை உணவு இவைகள் மட்டும் போதாது. அமைதியான குடும்ப சூழ்நிலை நல் உறவுகளோடு கூடிய இருப்பிட சூழ்நிலை மதிக்கத்தக்க வெளி உலக சூழ்நிலை நல்லெண்ணம் கொண்ட நட்பு வட்டம் உணர்வுபூர்வமான உறவுகள் வட்டம் அன்போடும் பண்போடும் ஒருவரை ஒருவர் சந்தித்தல் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் அன்பு உள்ளங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சந்தர்ப்பத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்தி மகிழ்தல் இது போன்ற நிகழ்வுகளினால் தான் நமது மனம் மகிழ்வடைந்து உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்து புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். மன அமைதியும் உளமார்ந்த முகமலர்ச்சியும்தான் நம்மையும் நம் வாழ்க்கையும் வளம் பெறச் செய்யும். வளமான நலமான வாழ்வைப் பெற நாம் முயல்வோமே!

Victory King (VK)

Monday, December 28, 2020

அகந்தையை அழிப்போம்!

 Status 443

விவேகானந்தர் அமெரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு ஐரோப்பியர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்த ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில் கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...' என்று கூறினான். இதை கேட்ட, விவேகானந்தர்  ‘அவை இரண்டிற்கும் இடையிலே தான், நான் அமர்ந்திருக்கிறேன்...’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் அவமானத்தால் தலை குனிந்தனர்.

விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து!

ஒருவருக்கு அகந்தை தலைக்கேறி விட்டால் கண்களும் காதுகளும் செயலிழந்து நாவினால் தப்புத் தாளங்கள் போட்டு ஒரு நிலையில் மற்றவர்கள் மத்தியில் மதிப்பிழந்து மானமிழந்து தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நிலை தான் வரும். உணர்ந்தால் உண்டு நல்வாழ்வு!

Victory King(VK)

Sunday, December 27, 2020

நோக்கத்தை உறுதி செய்!

 Status - 442.

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே...உடலில் வலுவில்லையே...உதவி செய்ய நண்பர்கள் இல்லையே... என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே...தயங்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும்.பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது. 

சுவாமி விவேகானந்தர்.

நாம் நமக்கு வேண்டிய இலக்கை மன உறுதியோடு தீர்மானித்து விட்டால் அதை நோக்கிப் பயணம் செல்லும்போது என்ன இடர்பாடுகள் இருந்தாலும் தூள் தூளாக்கி இலக்கை அடைந்தே தீருவோம். மன உறுதி, தொடர் முயற்சி, உழைப்பு இவைகள் இருந்தால் போதும். 

Victory King(VK)

Saturday, December 26, 2020

வாழ்ந்து சாதிப்போம்!

 Status 441

"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்....."

கவிஞர் கண்ணதாசன்

நமக்கு கவலை இருக்கலாம்; கடன் இருக்கலாம் ஏமாற்றும்; எத்தர்கள் இருக்கலாம்; நம்மை அவமானப்படுத்த துடிக்கும் துரோகிகள் இருக்கலாம்; கூடவே இருந்து குழி பறிக்கும் கயவர்கள் இருக்கலாம்;  எல்லா உதவிகளையும் நம்மிடம் பெற்றுக்கொண்டு பொல்லாங்கு கூறித் திரியும் உறவினர்களும் கூட இருக்கலாம். ஆனால் நாம்தான் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமே ஒழிய எதற்காகவும் எவருக்காகவும் நாம் நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது.

‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு, வாழ்வதற்காகவே நமக்குக் கொடுத்த இந்த அறிய பிறவியை வாழ்ந்து மகிழ்வோம்; வாழ்ந்தே சாதிப்போம்.

Victory King (VK)

Friday, December 25, 2020

மானிடப் பிறவியின் பயன்!

 Status 440

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. 

ஒளவையார்

எளிது எளிது மானிடராய் பிறந்து, சினம் பொறாமை போக்கி, ஏக்கமும் தாக்கமும் நீக்கி, அன்போடும் பண்போடும் வாழ்தல் எளிது;

கொடிது கொடிது மானிடராய் பிறந்தும், தான் என்ற அகந்தை பெற்று, அடுத்தவரை துன்புறுத்தி இன்பமுற்று, பொய்யும் புரட்டுமே தங்கள் வாழ்க்கையாக்கி, பிறவியின் பயனை இழந்து, இறுதியில் தன்னையும் இழக்கும் நிலை கொடிது;

எனவே இனிது இனிது சினம் நீக்கி, பொறாமை போக்கி, அகந்தையை அகற்றி, அன்பையும் பண்பையும் உள்வாங்கி, நமக்குக் கிடைத்த அரியதொரு மானிடப் பிறவியின் பயனை முழுமையாக அடைவோமே!

Victory King (VK)

Thursday, December 24, 2020

வாழும்போது மனிதத்துடன் வாழ்வோம்!

 Status 439             

ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும் போது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை.

பட்டினத்தார்

இன்று நமக்கு பக்க பலமும், பண பலமும், உடல் வளமும் இருக்கிறது என்று மற்றவர்களை மதிக்காது எகத்தாளம் பண்ணுவதும் மற்றவர்கள் மனதை துன்புறுத்துவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அடாத  செயல்களை செய்வதும்  இப்போது வேண்டுமானால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கலாம். நாம் ஆடி அடங்கி மற்றவர்கள் நம்மை நன்கு புரிந்த பிறகு, நாம் மற்றவர்களால் அவமதிக்கப்படுவதோடு, எழுந்து நடக்க முடியாத நிலைக்கு மானத்தை இழப்போம் மதிப்பை இழப்போம், செல்லாக் காசாகி விடுவோம் என்பதை நன்கு உணர வேண்டும்.

Victory King (VK)

Wednesday, December 23, 2020

செய்கின்ற தொழிலில் நேர்மை வேண்டும்!

 Status 438

நாம் செய்யும் தொழிலில் மேலும் மேலும் முன்னேற முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது நேர்மை, நாணயம், உண்மை, உழைப்பு அந்த தொழிலுக்கு உரிய மரியாதையை கொடுப்பது. இவைகளை விடுத்து வெட்டி பந்தா பண்ணுதல், தங்களை மிகை படுத்திக் காண்பித்தல், தங்கள் பின் பலம் என்ன என்பதை பறைசாற்றிக் கொள்ளுதல் இவைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை மதிக்க வைத்தல், எளியோரை தரம் தாழ்த்தி பேசுதல் இந்த செயல்களினால்  எதையும் சாதித்து விடலாம், முன்னேறி விடலாம் என்று நினைப்பவர்கள் ஆரம்பத்தில் சாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் போகப்போக அதலபாதாளத்தில் தான் விழுவார்கள். இதுதான் இயற்கையின் நீதி. எனவே சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மனசாட்சிக்கு பயந்து எந்த தொழில் செய்தாலும் எக்காலத்திலும் நாம் வளம் பெறுவது நிச்சயம்.

Victory King (VK)

Tuesday, December 22, 2020

உண்மையின் மதிப்பு!

 Status 437

பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

சுவாமி விவேகானந்தர்

‘பாம்பாட்டிக்கு பாம்பால் தான் சாவு’ என்று சொல்வார்கள். அதுபோல் பொய்யாலே பிழைப்பை நடத்துபவர்கள் தன் இனத்தைச் சேர்ந்த பொய்யர்களாலேயே தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வார்கள். பொய்யானது நம்மை துரத்தும் இரை தேடும் புலி. அது நம்மை அடித்து குதறாமல் விடாது. எனவே நாம் "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் நம்மை மதிக்கும்" என்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு மருந்திற்கும் பொய் பேசாமல் எப்பொழுதும் உண்மையே பேசி நம் வாழ்வை ஒளிமயமாக்குவோமே!

Victory King (VK)

Monday, December 21, 2020

நீ நீயாக இரு!

 Satus 436

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.

டாக்டர் அப்துல் கலாம்

நம் எண்ணம் தூய்மையாக இருந்து செயல் நேர்மையாக இருந்து நம் திறமையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி ஒரு குறிக்கோளை நாம் அடைய நினைக்கும் பொழுது அதனை நாம் அடைவது என்பது உறுதி. என் நிலையிலும் நம் நிலை மாறாத மனநிலையுடன் வாழ்ந்து வாழ்க்கையை வெல்வோமே!

Victory King (VK)

அன்பு என்பது யாதெனில்!

Status 435. 

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் தான் விளக்கம் பெறுகிறது அன்பு. 

அன்னை தெரசா. 

நாவில் தேனொழுக பேசுவதெல்லாம் அன்பாகாது. உண்மையான அன்பானது ஆழ்மனதில் இருந்து வந்து அதன் பிரதிபலிப்பு முகத்தில் மலர்ச்சியைக் கொடுக்கும். நம் நரம்புகள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று அன்பும் பண்பும் ஒருங்கிணைந்து நம் செயல்களில் வெளிப்படும். அதில் நமக்கு ஒரு பரவசம் ஏற்படும். அந்தப் பரவசமே மற்றவர்களுக்கு நம்மை ஈர்க்கும் சக்தியைத் தந்து பரஸ்பர உத்வேகத்தை ஏற்படுத்தும். அது நமக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருவரையும் இணைக்கும் நட்பு பாலமாக விளங்கி உறவுகளை மேம்படுத்தும். 

Victory King (VK)

Saturday, December 19, 2020

சுயமாக சிந்திப்போமே!

 Status 434

தமக்கென சொந்த கருத்து, புத்தி இல்லாதவர்கள் யார் எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள். பிறரது கருத்துக்களை அப்படியே ஏற்காமல் சுயமாக சிந்தித்து செயல்படுபவரே வெற்றி பெறும் தகுதி உடையவர்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

நாம் பிறர் சொல்லுவதை அப்படியே ஏற்காமல், வள்ளுவன் கூற்றுப்படி யார் எது சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை அறிந்து அதற்கேற்ப நாம் அதனை சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதுடன் நம் சிந்தனா சக்தியையும் நம் திறனையும் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

Victory King (VK)

Friday, December 18, 2020

உண்மையுடன் நட்பாக இருங்கள்!

 Status 433

பொய்யுடன் நட்புறவு வேண்டவே வேண்டாம். பொய்யுடன் சேர்ந்து நீங்களும் நசுக்கப் படுவீர்கள். உண்மையிலேயே நீங்கள் பூத்துக் கொண்டிருக்கும் உயிராக ஆக வேண்டுமானால் உங்கள் உயிருக்கு உண்மையாகவே நீங்கள் சுதந்திரம் அளிக்க விரும்பினால் ஒரு போதும் பொய்யோடு நட்பு கொள்ளாதீர்கள். என்ன விலை கொடுத்தேனும் உண்மையாக இருங்கள்.

ஓஷோ

பொய் என்பது புற்று நோயின் ஆரம்பம். அதை சரி செய்யாமல் மேலும் மேலும் பொய்மையே வாய்மையாக கொண்டால் அது புரையோடி வாழ்வையே கெடுத்துவிடும். எனவே உண்மையே பேசுவோம் என்ற தாரக மந்திரத்தை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வாழ்வில் நலம் பெறுவோம்.

Victory King (VK)

Thursday, December 17, 2020

வைராக்கியம்!

 Status 432

கீழே கொட்டிய கடுகை பொறுக்கி எடுப்பதை போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் அதை  வைராக்கியத்தால் சாதிக்க முடியும்.

ராமகிருஷ்ணர்

வைராக்கியத்துடனும் ஒரு குறிக்கோளுடனும் ஒரு இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற தீவிர சிந்தனையோடு ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நம் மனமானது அந்த நேர் கோட்டைவிட்டு விலகாது நாம் குறிக்கோளை அடைந்தே தீருவோம்.

Victory King (VK)

Wednesday, December 16, 2020

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்போமே!

 Status 431

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

அன்னை தெரசா

பிறரிடம் காட்டும் அன்பு பாசம் நேசம் கருணை இவர்களை பொறுத்துத்தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டி கருணை செய்கிறார். உயிரோடு இருக்கும் பொழுது நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்பத்தான் நாம் இறக்கும் தருவாயிலும் இறந்த பிறகும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். நலிந்தோருக்கு நல்லது செய்தல், உதவி வேண்டுவோர்க்கு உதவி செய்தல், பசித்தோர்க்கு பசியாற்றுதல் இவை தான் நாம் இரக்கப்பட்டு செய்யும் செயல்களுக்கு முழு பலனளிக்கும். எனவே புகழுக்கு ஆசைப்பட்டு பலனில்லா செயல்களை செய்வதை விடுத்து வாடுவோர்க்கு வாழ்வளித்து மகிழ்வோமே!

Victory King (VK)

Tuesday, December 15, 2020

புன்னகையே அன்பின் சின்னம்!

 Status 430

புன்னகையே அன்பின் சின்னம். நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு.

அன்னை

நம் முகத்தில் புன்னகை இருந்தால் பொன்னகை தேவையில்லை என்று சொல்வார்கள். நம் உடலை அலங்கரிப்பது பொன்நகை. உள்ளத்தை அலங்கரிப்பது புன்னகை. புன்னகையால் முகம் பொலிவோடு இருப்பது மட்டுமல்லாமல் நமக்கு ஒரு அலாதி தைரியத்தையும் எழுச்சி உணர்வையும் கொடுப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களையும் உத்வேகப்படுத்தும் மகாசக்தி அந்தப் புன்னகைக்கு உண்டு. எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு ஆற்றல் நம் உடல் வலிமைக்கு மேல் புன்னகைக்கு சக்தி உண்டு. எனவே முகமலர்ச்சியோடு நாம் இருப்பதோடு மற்றவர்களையும் மகிழச் செய்வோம்.

Victory King (VK)

Monday, December 14, 2020

வாழ்க்கையின் வெற்றிக்கான மூன்று ரகசியம்!

 Status 429

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். உணர்வதற்கான இதயம், சிந்தனைத் திறன் உள்ள மூளை, வேலை செய்யக்கூடிய கைகள்.

சுவாமி விவேகானந்தர்

தன் குற்றங்களை அறிந்து திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும், சிந்தித்து ஆராய்ந்து செயல்படக்கூடிய வகையில் தன் திறனை மேம்படுத்திக் கொள்ளுதலும், அனைத்திற்கும் பிறர் கையை எதிர்பாராமல் தானே எந்த ஒரு செயலிலும் ஈடுபாட்டுடன் செயல்வடிவம் கொடுத்தலும் ஆன திறன்  ஒருவரிடம் இருக்குமேயானால் அவரது வாழ்க்கை தன்னம்பிக்கையுடன் மேலும் மேலும் உயர்வடையும்.

Victory King (VK)

Saturday, December 12, 2020

தன் வினை!

 Status 427

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒருவருக்கு துரோகம் செய்துவிட்டு நம் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு துரோகச் செயலுக்கும் பல மடங்கு தண்டனையை அனுபவிப்பதோடு அது நம் குடும்பத்தையே அழித்துவிடும். எனவே அடுத்தவனுக்கு கேடு செய்வதையும் நிந்திப்பதையும் விடுத்து நாமும் நம் குடும்பமும் நலமுடன் வாழும் வழியை பார்ப்போமே!

Victory King (VK)

Friday, December 11, 2020

பாரதியை போற்றுவோம்!

 Status 426

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே  எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம்

பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.

- மகாகவி பாரதியார்.

எனவே நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கவும், மேலும் மேலும் பாவ காரியங்களை செய்யாமல் இருக்கவும், நாம் அன்னையிடம் ஆத்ம சுத்தியுடன் வேண்டினால் நம் பாவங்கள் நீங்குவதோடு நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இருக்காது.

Victory King (VK)

Thursday, December 10, 2020

உண்மையின் வலிமை!

 Status 425

நம்மிடம் உண்மை இருக்கலாம். அது மட்டும் போதாது. உண்மையின் பக்கம் நாம் இருக்க வேண்டும். நாம் உண்மைவாதியாக இருந்தாலும் எந்த தருணத்திலும் எக்காரணத்தினாலும் நாம் பகட்டு வித்தையால் மற்றவர்களை ஏமாற்றி பொய்யையே மூலதனமாக வைத்து வாழ்பவர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளாமல் இருந்தால்தான் நாம்  கொண்ட உண்மைக்கு உரிய அந்தஸ்து கிடைக்கும். உண்மையின் புனிதத்தன்மையை காப்போம். மதிப்போடு வாழ்வோம்!

Victory King (VK)

Wednesday, December 9, 2020

நா நயமும், நாணயமும்!

 Status 424

ஒருவரிடம் நா நயம் இல்லையென்றால் அவரிடமிருந்து நட்பும் சுற்றமும் விலகிப் போகும். அத்துடன் நாணயமும் இல்லையென்றால் மற்றவர்கள் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள். ஆக, நா நயமும் நாணயமும் இல்லாதவர்கள் வாழ்க்கை சூனியம் தான். எனவே நாம் நாவை அடக்கி நா நயத்துடன் பேசி நாணயத்தையும் காப்பாற்றி அன்போடு பழகி பண்போடு வாழ்ந்து அனைவரையும் அரவணைப்போமே!

Victory King (VK)

Tuesday, December 8, 2020

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் ஆசி!

Status - 423 

ஸமஸ்த லோகா சுகினோ பவந்து!

தண்ணீருக்குள் பாறை வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால் களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்துவிடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்துக்குக் கூட சலனமடையும்.

- ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர்.

ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் அருளால் நாம் அனைவரும் திடமான மனதும் நம் மீது நம்பிக்கையும் கிடைக்கப் பெற்று மனமகிழ்வுடன் வாழ்வோமே!

- Victory King (VK)

Monday, December 7, 2020

வினையும் பயனும்!

 Status 422

மனிதன் ஏமாற்றிவிட்டான் என்று கவலை வேண்டாம். ஒன்று நினைவு வைத்துக் கொள். காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. யாரும் தப்பிக்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

ஒருவன் அடுத்தவனை ஏமாற்றி அவனுக்கு துரோகம் செய்வது. கொலை செய்வதற்கு சமம். அந்தப் பாவம் அவனை சும்மா விடாது. காலச் சுழற்சியில் ஏமாற்றியவனுக்கும் இதே நிலை வரும்.  அப்பொழுது அவன் செய்த பாவத்திற்கு அவன் தலை தூக்க முடியாத அளவிற்கு தண்டனை வந்தே தீரும். தப்பவே முடியாது. எனவே நியாயத்தின் பக்கம் நாம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோமே.

Victory King (VK)

Sunday, December 6, 2020

உங்களால் முடியும்!

 Status 421

உங்களால் முடியும்: யார் ஒருவர் எதை அடைவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அவர் அதை அடையாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் முடியாது.

சுவாமி விவேகானந்தர்

நாம் ஒரு செயலை செய்து முடிப்பதற்கு நமது மூலதனம் முதலில் அதற்கான தகுதி. அடுத்தது விடாமுயற்சி. இவ்விரண்டும் இருந்து நேர்மையுடன் எந்நிலையிலும் சோர்வடையாமல் செயல்பட்டால் நாம் அதில் வெற்றி வாகை சூடுவது நிச்சயம்.

Victory King (VK)

Saturday, December 5, 2020

நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம்!

 Status 420

நாம் எதை தொலைத்தாலும் நம்மை நாமே தொலைத்து விடக் கூடாது. நம் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றுவிட்டால் அது நம்மை அதன் போக்கில் தாறுமாறாக அழைத்துச் சென்று ஒரு நிலையில் திக்குத் தெரியாமல் தவிர்ப்போம்.நாம் என்ன செய்கிறோம் என்பதே நமக்கே புரியாத நிலை வந்துவிடும். நம்மை நாமே தேடக்கூடிய நிலையும் அதுவே. எனவே மனம் போன போக்கில் நாம் போகா வண்ணம் நம்மை நாம் காப்பாற்றிக் கொண்டு நல்லவைகளையே நினைத்து நன்மைகளையே செய்து நாம் நலமுடன் வாழ்வோமே

Victory King (VK)

Friday, December 4, 2020

இறை பார்வை!

Status - 419

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் 

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

பொருள்:

நம்மை கண்காணிப்பவர்கள் இல்லை என்ற தைரியத்தில் தவறு செய்பவர்கள் அநேகர். அது மனித இயல்பு. உண்மையில் நம்மை கண்காணிக்கும் இறைவன் இல்லாத இடமே இல்லை. அழ்ந்த விழிப்புணர்வுடன் பார்த்தால்  கண்காணிப்பவர் எங்கும் இருப்பது உணர முடியும். அவ்வாறு உணர்ந்த பின்னர் தங்களிடம் இருக்கும் தவறுகளை விட்டுவிடுவார்கள் மனிதர்கள்.

- திருமந்திரம் 2067

அப்படி உணர்ந்து திருந்தினால் நல்ல விஷயம் தான். இல்லையேல் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்! என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது

Victory King (VK)


Thursday, December 3, 2020

பிரார்த்தனையின் பலன்!

 Status 418

என்னதான் பிரார்த்தனை என்ற பெயரில் நாம் கடவுளிடம் மனம் உருகி வேண்டினாலும், அதற்கான ஹோமங்களை வீட்டில் ஊர் மெச்சம் அளவிற்கு செய்தாலும், நாம் நினைப்பதும் வேண்டுதலும் நியாயமானதாக இல்லையென்றால், தற்சமயம் நமது வேண்டுதல்கள் பலிப்பது போல் தோன்றினாலும் எண்ணத்தின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கும். ஆனானப்பட்ட தீவிர சிவபக்தனான இராவணனையே ராமர் வதம் செய்ததும் , சிவனிடம் வேண்டி பெற்ற வரத்தினை தன் தீவினையினாலும் அகம்பாவத்தினாலும் அதனைக் கெடுத்துக் கொண்ட சூரனை முருகன் வதம் செய்ததும் தெரிந்திருந்தும், பணத்தினாலும் போலி பக்தியினாலும் நாம் எதையும் வென்று விடலாம் என்ற நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நம் வாழ்க்கை பரமபதத்தில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட நிலைதான். எனவே பக்தியின் புனிதத்தை கெடுக்காமல் உள்ளத் தூய்மையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு

Victory King (VK)

Wednesday, December 2, 2020

மனோபலமும் தேகபலமும்!

 Status 417

ஒரு உறுதியான மனம் பலமற்ற உடலை எடுத்துச் செல்லும். ஆனால் ஒரு உறுதியற்ற மனதால் பலமுள்ள உடலைக் கூட எடுத்துச்செல்ல முடியாது

குருதேவ் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஒரு செயலை செய்வேன் என நினைப்பதும் சொல்வதும் தன்னம்பிக்கையைக் குறிக்கும். ஆனால் அந்த செயலில் பல இடர்பாடுகள் வந்தாலும் அதை செய்தே தீருவேன் என்று மனதில்கொண்டு ஈடுபாட்டுடன் அந்த செயலை செய்து காட்டுவதுதான் மனோபலம். எனவே மனோபலம்தான் தேகபலம்.

- Victory King (VK)


Tuesday, December 1, 2020

நம்பிக்கை மேல் நம்பிக்கை வைப்போம்!

 Status 416

உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை

விவேகானந்தர்

முதலில் நம்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். எந்த ஒரு செயலையும் நாம் முழு நம்பிக்கையுடன் தொடங்கி திடமனதுடனும் நேர்மையுடனும்  தளர்வில்லாமலும் செயல்பட்டால் அந்த செயல் முழுமையாக வெற்றி அடைவது உறுதி. எனவே நம்பிக்கையை மூலதனமாக வைத்து செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

Victory King (VK)

Monday, November 30, 2020

துரோகமும் விளைவும்!

 Status - 415

யாரையும் திட்டாதீர்கள்; சாபம் விடாதீர்கள்; கெடுதல் நினைக்காதீர்கள்; நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும். நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

- கிருஷ்ண பரமாத்மா

நம் எண்ணம் சொல் செயல் அனைத்திலும் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நமக்கு  யார் துரோகம் செய்தாலும் அநீதி இழைத்தாலும் கொடுமைகள் செய்தாலும் அதனுடைய விளைவால் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையின் விளைவும் நமக்கு துரோக செய்தவர்களைத் தாக்கும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அவர்கள் வாழ்க்கை அழிவதில் இருந்து தப்பவே முடியாது.

- Victory King (VK)


Saturday, November 28, 2020

உழைப்பே உயர்வு தரும்!

 Status - 414

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதைவிட உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும்.

- ரிச்சர்ட் வாட்லி

உழைத்து சம்பாதிப்பவர்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். ஏதோ ஒரு விதத்தில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிவது அரிது. எனவே நாம் நேர்மையாக சம்பாதிப்பதுடன் நம் பிள்ளைகளும் அதை உணரும்படி வாழ்ந்து காட்டும்போதுதான் தாமும் உழைக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் அவர்களுக்குள் ஏற்படும். எனவே, நம் பிள்ளைகள் வாழ்க்கை உயர்வதும் தாழ்வதும் பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. 

- Victory King (VK)

Friday, November 27, 2020

அன்பும் பண்பும் வளமான வாழ்வும்!

Status 413

யார் உங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள். யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களை வெறுத்து விடாதீர்கள். யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்.

சுவாமி விவேகானந்தர்

இவை மூன்று குணநலன்களும் தான் ஒருவருடைய பண்பிற்கு இலக்கணமாகும். இல்லையேல் நம்மை  சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள் என முத்திரையிட்டு நாம் தனிமைப்படுத்தப்படுவோம். எனவே நாம் அன்போடும் பண்போடும் பழகி வாழ்வை வளமாக்கிக் கொள்வோம்.

Victory King (VK)

Thursday, November 26, 2020

மகிழ்ச்சியை பரப்புவோம்!

 Status 412

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

பெர்னாட்ஷா

சுற்றத்தோடு சுமுகமாகவும் சூழலை ரசனையோடு கண்டு மகிழ்ந்தும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதை இலேசாகவும் அகமகிழ்ந்து முகம் மலர்ந்து அனைவரையும் அரவணைத்து வாழ்க்கையை நாம் எதார்த்தமாக நகர்த்திச் செல்லும் பொழுது நமக்கு மனச்சுமை என்பதே உணராமல் மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, November 25, 2020

இயற்கையின் சீற்றம்!

 Status 412

இயற்கை சீற்றங்கள் நம்மை ஒன்றன்பின் ஒன்றாக விரட்டினாலும் நாம் மனம் தளராது சுய கட்டுப்பாட்டுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்தும் நம்மால் பிறருக்கும் பிறரால் நமக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதனை எதிர்கொண்டு நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறரையும் முடிந்தவரை காப்பாற்றி வெற்றி பெறுவோம்!

Victory King (VK)

Tuesday, November 24, 2020

உயர்வும் தாழ்வும்!

 Status 411

மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.

பெர்னாட்ஷா

நாம் பிறருக்கு துரோகம் செய்யாமல் அடுத்தவனை அழிக்காமல் நேர்வழியில் உயரும் பொழுது நம் உயர்வும் மதிப்பும் நிலைத்து நிற்கும். குறுகிய நெஞ்சத்தோடு குறுக்கு வழியிலும் சுயநலத்தோடும் அடுத்தவனை அழித்தும் நமக்குக் கிடைத்த உயர்வு எவ்வளவு வேகத்தில் உயர்ந்தோமோ அதைவிட பல மடங்கு வேகத்தில் அதல பாதாளத்தில்தான் விழுவோம். எனவே நமது உயர்வு நிலைத்து நிற்பதும் படுகுழியில் விழுவதும் நம் கையில்தான் உள்ளது.

Victory King (VK)

Monday, November 23, 2020

நிகழ்காலத்தில் வாழ்வோமே!

 Status 410

இந்த கணம் தான் உண்மை. மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்

ஓஷோ

நிகழ்காலத்தோடு ஒன்றி மனமகிழ்வுடன் அதனுடன் நாம் நடைபோடும் பொழுது ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். அதனை வருங்காலத்தில் நாம் அசைபோட்டு மகிழும் பொழுது நமக்கு கிடைக்கும் சுகத்திற்கு அளவே இல்லை. வருங்காலத்தை அதை வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம். எனவே நம் கண் முன்னே கண்டு கொண்டிருக்கும் நிகழ்காலத்தை சுகமாக அனுபவித்து மகிழ்வோமே

Victory King (VK)

Sunday, November 22, 2020

சாதனையும் போதனையும்!

 Status 409

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

பெர்னாட்ஷா

நாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது  நாம் கொடுக்கும் அறிவுரைகளை நாம் கடைப்பிடிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் அந்த அறிவுரையானது  நம்முடைய இயலாமையைத்தான் காட்டும். மற்றவர்கள் மத்தியில் அவமானப்பட கூடிய நிலை வரும். எனவே நாம் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் உண்மை இருந்தால் மட்டுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.

Victory King (VK)

Saturday, November 21, 2020

நம் சுயத்தை இழக்க வேண்டாமே!

 Status 408

எவரைப் போல இருக்கவும் முயலாதே. எவரையும் பின்பற்றாதே. அப்படிச் செய்தால் உன் இருப்பு போலி ஆகும். அது தற்கொலையை விட மோசமானது. நீ நீயாக இரு. அப்போதுதான் நீ ஆதாரபூர்வமாக பொறுப்புள்ளவராக உண்மையாக இருக்க முடியும்.

ஓஷோ

நாம் போலி பகட்டை நம்பி மனதை சிதற விடாமலும், எந்நிலையிலும் நம் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமலும் வாழ்வோமேயானால் நாம் வாழ்நாள் முழுவதும் தலைநிமிர்ந்து வீறுநடை போட முடியும்.

Victory King (VK)

Friday, November 20, 2020

அராஜகத்தின் உச்சகட்டம் அழிவு!

 Status 407

சூரபத்மன் என்னும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் முருகனைப் படைத்தார். அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள். தனது சக்தியை அதில் உருவேற்றி,  அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள். முருகனும் அந்த வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார்சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப்  பிளந்தார். அராஜகம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இந்த உண்மையைத்தான் சூரசம்கார நிகழ்வு நமக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது. எனவே அராஜகத்தின் உச்சக்கட்டம் அழிவுதான் என்பதை நாம் நன்கு உணர வேண்டும்

Victory King (VK)

Thursday, November 19, 2020

சர்வதேச ஆண்கள் தினம்!

 Status 406

சர்வதேச ஆண்கள் தினமாகிய இன்று நாம்

"அன்போடும் பண்போடும் பழகுவோம்

ஆணவத்தை தலைதூக்க விடமாட்டோம்

இயல்பாக வாழ்வோம்

ஈகோவை விரட்டுவோம்

உறவுகளை மதிப்போம்

ஊர் மெச்ச வாழ்வோம்

எதிரிகளை அண்ட விடோம்

ஏமாற்றாமலும் ஏ மாறாமலும் இருப்போம்

ஐய்ய உணர்வை மனதில் கொள்வோம்

ஒற்றுமைக்கு பாடுபடுவோம்

ஓரவஞ்சனை செய்யோம்

ஒளவை வாக்கை மதிப்போம்

அஃதே நாம் பிறந்த பிறவியின் இலக்கு"

என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்

Victory King (VK)

Wednesday, November 18, 2020

பண்போடு வாழ்வோமே!

 Status 405

நமக்கு அதிகாரம் பலம் இருக்கிறது நாம் எதை செய்தாலும் சாதித்துவிடலாம் என்ற ஆணவத்தில் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்வதும் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் இருப்பதும் கேட்டாலும் அதற்கான உரிய மதிப்பை கொடுக்காமல் இருப்பதும் தொலைபேசியில் அழைத்தாலும் பதில் அளிக்காமல் இருப்பதுடன் அதற்கான ஒரு தார்மீக பயம் இல்லாமல் செயல்படுவது இவைகள் அனைத்தும் ஒரு பண்பற்ற செயல். எனவே நாம் சரியாக இருந்தால்தான் நம்மைப் பின்பற்றுபவர்கள், சரியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து, அராஜகம் நிலைக்காது ஆணவம் அழிவைத்தான் கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்து, மனசாட்சிக்கு மதிப்பளித்து பண்போடு வாழ்வோமே. குறிப்பாக இளையதலைமுறையினர் இதை நன்கு உணர வேண்டும்.

Victory King (VK)

Tuesday, November 17, 2020

மனம்போல் வசந்தம்!

 Status 404

மரணத்திற்குப் பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம்.எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

ரமண மகரிஷி

எனவே நிகழ்காலத்தில் நம் கடமைகளைச் செவ்வனே செய்து நடப்பவைகளை மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை வசந்தம் ஆக்கி வாழ்ந்தால் எதிர்காலமும் நம் மனம்போல் வசந்தம் ஆகவே அமையும்.

Victory King (VK)

Monday, November 16, 2020

வாதமும் வெற்றி தோல்வியும்!

 Status 403

வாதத்தில் தோற்றவன் அவதூறை கையில் எடுக்கிறான்.

சாக்ரட்டீஸ்

தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும் அதையே நியாயப்படுத்தியும் பேசிக் கொண்டிருப்பவன் தன் அறிவை இழக்கிறான். மனசாட்சியை கொல்கிறான். அதன் பலன் மூர்க்க குணம் தலைவிரித்தாடுகிறது. நாவினால் அடுத்தவரை சாடுகிறான். செயலினால் அடுத்தவரை அழிக்க நினைக்கிறான். முடிவில் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். எனவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து  ‘நா’ நயத்துடன் நியாயத்தின் பக்கம் நின்று சொல்லிலும் செயலிலும் நம் பண்பை காப்பாற்றி ஆத்ம திருப்தியோடு வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, November 14, 2020

பிரார்த்தனையும் பொறுமையும்!

 Status 401

பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!

புத்தர்

சாவி இல்லாத பூட்டை எப்படித் தயாரிக்க மாட்டார்களோ அதுபோல்தான் இறைவன் நமக்கு தீர்வு இல்லாத பிரச்சனைகளை கொடுக்க மாட்டார். எனவே பிரச்சனைகளைக் கண்டு கலங்காமல் இறைவனை பொறுமையுடன் பிரார்த்தித்து வந்தால் பிரச்சனைக்கான தீர்வு நமக்கு வந்தே தீரும். இறைவன் தீயவர்களை ஓடவிட்டு அழிப்பார். நல்லவர்களை நடக்கவிட்டு அருள்புரிவார். நம்புவோம் நலமுடன் வாழ்வோம்

Victory King (VK)

Friday, November 13, 2020

தீபாவளி நல்வாழ்த்துகள்!

 Status 400

உற்றார் உறவினர் சுற்றம் சூழ ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்து இந்த தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்றாலும் நாம் இருக்கும் இடத்திலேயே இருப்பவர்களுடன் இன்முகத்துடன் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்வோம். அத்துடன் உறவினர்களுடனும் நட்பு வட்டத்திலும் தொலைபேசி வீடியோகால் மூலம் நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறி மகிழ்வோம். புத்தாடை உடுத்தி வித விதமான இனிப்பு கார வகைகளை உண்டு மகிழ்ந்து இறை ஆசியையும் பெரியோர்களின் ஆசியையும் பெற்று பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தி ஆனந்தமாய் இந்த தீபாவளியை கொண்டாட மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Victory King (VK)

Thursday, November 12, 2020

வெற்றிக்கனி!

 Status - 399

எல்லோரும் செல்கிறார்களே என்று அவர்களைத் தொடர்ந்து நீங்களும் செல்வதை நிறுத்துங்கள். உங்களுக்கான நல்லதோர் பாதையைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் உங்களுக்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள். அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி  தளர்வடையாமல் முயன்று வெற்றி கிட்டும் வரை ஓயாமல் உழையுங்கள். மற்றவர்கள் நம்மைக் கண்டு வியக்கும் அளவுக்கு நாம் உயர்வது நிச்சயம். அனைத்துக்கும் வேண்டியது மன உறுதி ஒன்றே.

Victory King (VK) 

Wednesday, November 11, 2020

கீதாச்சாரம்!

Status-398

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோஅது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோஅது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- கீதாச்சாரம்.

எனவே நாம் கவலையை மறந்து கடமையை செய்து கருணை நெஞ்சத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால் நலமான வாழ்க்கை நம்மை வந்து அடையும்.

Victory King (VK)



Tuesday, November 10, 2020

வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம்!

 Status 397

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித் தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்.

கிருஷ்ண பரமாத்மா

அடுத்தவன் எப்போது வீழ்வான் சந்தர்ப்பம் பார்த்து அவனை அழித்து சொத்துக்களை அபகரிக்கலாம் என்று காத்திருக்கும் துரோகிகளுக்கு நாம் இடம் கொடுக்காமல் அவனது துரோகச் செயலை அவ்வப்பொழுது களையெடுத்து நம்மை நாம் உயர்த்திக் கொண்டே சென்று அவனை கலங்க வைத்து தலை குனிய வைத்து நாம் தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டுவோம். மனதில் உறுதி இருந்தால் அனைத்தும் சாத்தியமே.

Victory King (VK)

Monday, November 9, 2020

மானிடப் பிறவியின் பயன்!

 Status 396

துரோகம் செய்பவர்களிடம் கோபம் இருக்காது. கோபம் இருப்பவர்களிடம் துரோகம் இருக்காது.

சாணக்கியர்

துரோகம் செய்பவர்கள் அனைவருமே மிருக குணம் படைத்த மனித ஜென்மங்கள். அவர்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்த இயலாத ஜடங்கள். சுயநலவாதிகளுக்கு தாம் செய்வது தவறு என்று உணரும் சக்தி இருந்தால் தானே மற்ற உணர்ச்சிகள் வேலை செய்யும். ஆனால் தவறு எது நியாயம் எது என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவர்கள் அநியாயத்தைக் கண்டும் துரோகத்தை கண்டும் மனம் பொறுக்காமல் பொங்கி எழுவார்கள். எனவே நாம் எடுத்த பெருமைமிகு மானிட ஜன்மத்தில் நியாயத்தின் பக்கம் நின்று தலை நிமிர்ந்து வாழ்வோம்.

Victory King (VK)

Sunday, November 8, 2020

உண்மை, அன்பு, பண்பு, அடக்கம்!

 Status 395

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்.

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்

உண்மை அன்பு பண்பு அடக்கம் இவைகளை நாம் செயல் வடிவில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனுடைய மதிப்பு நம் வாழ்நாள் முழுவதும் ஏன் வாழ் நாளுக்குப் பிறகும் நிலைத்து நின்று நம் புகழ் பாடுவதோடு நம் குடும்பத்தையும் மகிழ வைத்து வழிநடத்திச் செல்லும். நாமும் கடைபிடித்து நலம் பெறுவோமே!

Victory King (VK)

Saturday, November 7, 2020

பிறப்பும் இறப்பும்!

 Status 394

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு, சுகம் சோகம், பாசம் பகைமை, நல்லவை தீயவை, லாபம் நஷ்டம், சினேகம் குரோதம் அனைத்தையும் சந்தித்துத்தான் நம் வாழ்க்கை படகில் பயணிக்கிறோம். இதில் ஒருவர் இறந்த பிறகு ஒரு அன்னப் பறவை பாலுடன் கலந்த தண்ணீரை விலக்கி பாலை மட்டும் பருகுவது போல் அவர்களுடைய நல்லவைகளை மட்டும் நினைவில் கொண்டு அவர்களின் புகழை பறைசாற்றுவது தான் பண்பு. அதை விடுத்து இறந்த பிறகும் அவர்களுடைய தீயவைகளை மட்டும்  மனதிற்கொண்டு அதை அப்படியே வம்சாவழிகளுக்கும் பரப்பி அவர்கள் வாழ்க்கையையும் சூனியம் ஆக்காமல் வாழப் பழகுவோம்.

Victory King (VK)

Friday, November 6, 2020

நல்லதையே நினைப்போம், நலமாக வாழ்வோம்!

 Status 393 

பழுத்துக் கனிந்த பழம் தரையில் விழுந்துதான் தீர வேண்டும். அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆக வேண்டும் இறப்பது நிச்சயம், இருப்பது நிச்சயமில்லை. 

- ஸ்ரீ ராமர்

அடுத்த நிமிடம் நாம் இருப்போமா இல்லையா என்பதே தெரியாத நிலையில் நம்மிடம் போட்டி பொறாமை குரோதம் அடுத்தவனை அழித்து பிழைத்தல் போன்ற கொடூர குணங்களால் நாம் இறந்த பிறகு நம்  வம்சத்திற்குத் தான் அழிவு என்பதையும் உணராமல் வாழ்ந்து தான் என்ன பயன். நாம் உயிரோடு இருக்கும் நிமிடம்வரை நல்லவற்றையே நினைத்து நன்மைகளையே செய்து நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

Thursday, November 5, 2020

நன்மைகள் நம்மைத் தேடி வர!

 Status - 392

நீ பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பு, மரியாதை போன்றவற்றை பிறர் எதிர்பார்க்கும் முன்னர் கொடுப்பாயேயானால் உனக்கானது உன்னைத் தேடி வரும்.

- கிருஷ்ண பரமாத்மா 

நாம் பிறரிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதனை நாம் பிறருக்குக் கொடுத்து கடைபிடித்தால் வாழ்க்கையில் நன்மைகள் நம்மைத் தேடி தானே வரும். எனவே, நம் வாழ்க்கையில் நன்மைகளையே செய்து நலம் பெறுவோமே!

- Victory King (VK)


Wednesday, November 4, 2020

அஞ்சுவதற்கு அஞ்சுவோமே!

 Status 391

அஞ்சக்கூடாது விடயங்களுக்கு அஞ்சுபவர்களும் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களும் தீய பாதையில் செல்கிறவராகிறார்கள்.

புத்தர்

பொய் சொல்வதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு அஞ்சவேண்டும், அடுத்தவனை அழித்து தாம் மட்டும் வாழ எண்ணுவதற்கு அஞ்ச வேண்டும். இதையெல்லாம் விடுத்து தாம் செய்த செயல்களுக்கெல்லாம் தண்டனையை அனுபவிக்கும் பொழுது உயிருக்கு பயந்து அஞ்சுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி அஞ்சுவதும் ஒரு சுயநலம்தான். எனவே நாம் வாழும் பொழுது அஞ்ச வேண்டிய விஷயத்திற்கு அஞ்சி வாழ்ந்தால் நாம் அமைதியுடன் நலமாக வாழலாம்.

Victory King (VK)

Tuesday, November 3, 2020

உண்மையும் பொய்யும்!

 Status 390

நீங்கள் எதை வேண்டுமானாலும் மறைத்துவிட முடியும்; ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களை போன்றது; அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைபிடிக்க முயலுங்கள், உண்மையாக இருக்க முயற்சியுங்கள்.

புத்தர்

உண்மை எப்பொழுதும் நிலைத்து நிற்பது. உண்மை பேசுபவர்களிடம் எந்த சந்தர்ப்பத்திலும் தடுமாற்றம் இருக்காது. பொய் பேசுபவர்கள் பொய்க்கு மேல் பொய்க்கு மேல் பேசிக்கொண்டே அவர்களுடைய வாழ்க்கையே பொய்யாகிவிடும். கடைசியில் அவர்கள் பேசும் பொய்யே அவர்களுடைய முகத்திரையை கிழிக்கும் ஆயுதமாக மாறிவிடும். எனவே எனவே உண்மையே பேசி நன்மைகளையே செய்து நலமாக வாழ்வோம்

Victory King (VK)

Monday, November 2, 2020

நலமாக வாழும் வழி!

 Status 389

ஆகாயத்திற்கு சென்றாலும், நடுக் கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது.

புத்தர்

தீய எண்ணம் தீய செயல் அதில் காணும் சுகம் அனைத்துமே ஒருவருடைய அழிவு காலத்தை உணர்த்தும் முன்னெச்சரிக்கையே. அதையும் தாண்டி தீய செயல்களை தொடர்பவர்கள் வாழ்க்கை நரகமாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதனை உணர்ந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம். நலமாக வாழ்வோம்.

Victory King (VK)

Sunday, November 1, 2020

தண்டனையில் இருந்து தப்ப முடியாது!

 Status 388

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.

புத்தர்

அடுத்தவர்களுக்கு தீங்கு இழைத்து அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து சந்தோஷப்படுபவர்கள், அதேபோல் தமக்கும் அந்த நிலை வரும் பொழுது தான் அந்த துன்பத்தின் வலியும் வேதனையும் புரியவரும். தமக்கு பக்க பலத்திற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற மமதையில் அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் எங்கோ ஒரு இடத்தில் தண்டனைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவர்களுக்கு தீங்கு இழப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)

Saturday, October 31, 2020

தெளிவான சிந்தனை!

 Status 387

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

டாக்டர் அப்துல் கலாம்

நமக்கு துன்பங்கள் வரும் பொழுது தளர்ந்து விடாமல், துன்பத்திற்கு  காரணமானவர்களை பற்றி சிந்தித்து சிந்தித்து கோபப்படாமல் துன்பத்திலிருந்து மீள என்ன வழி என சிந்தித்து செயல்பட்டு துன்பங்களை சந்தித்து விட்டால் வாழ்க்கையில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம். நமது தெளிவான சிந்தனையே வெற்றிக்கு வழிவகுக்கும்.

Victory King (VK)

Friday, October 30, 2020

உறவுச் சங்கிலி விடுபடாமல் இருக்க!

 Status 386

உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான் பிறகு  குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும். ஆனால் தற்கால வாழ்க்கை முறையில் சில பல காரணங்களினால் இன்றையஇளைய தலைமுறைகள் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வளரும் முறை. சிறுவயதிலிருந்தே உறவுகளின் மேன்மையை சொல்லி வளர்காததால் வந்த விளைவுதான் இது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் உறவு சங்கிலி விடுபடாமல் இருக்க வாய்ப்புண்டு.

Victory King (VK)

Thursday, October 29, 2020

தீய சக்திகள் விலக!

 Status 385

தீய சக்திகள் விலகி நன்மைகள் பெருகச் செய்ய வேண்டியவைகள்:

எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. வலம்புரிச் சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்குச் சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். 

இந்துமதம் முகநூல் பக்க பதிவு.

மனதார நம்பி கடைபிடிப்போம். நம்மை நாம் காப்போம். நலமுடனும் மனதிடமுடனும் வாழ்வோம்.

Victory King (VK)

Wednesday, October 28, 2020

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்!

 Status 384

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 

பொருள்: ஊரை பகைத்தால் அடியோடு அழிய நேரிடும்

கொன்றை வேந்தன்

அனைவரையும் அரவணைத்து வாழ்வதுதான் கற்றவர்களுக்கான பண்பு. அதை விடுத்து சுயநலம் மிகுதியால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கெடுதல் செய்தல், அவர்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அனைத்து செயல்களில் ஈடுபடுதல் இவ்வாறான தீய செயல்களை செய்பவர்களின் குடும்பமே வேரோடு அழிந்து விடும் என்பதை அன்றே ஔவையார் தன்னுடைய கொன்றைவேந்தன் நூலில் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். நீதி நூல்களை மதிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

Victory King(VK)

Tuesday, October 27, 2020

கற்ற கல்வியின் பயன்!

 Status 383

கல்விக்கு அழகு கசடற மொழிதல். 

குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.

வெற்றிவேற்கை

கற்றதினால் ஆன பயனால் நல்வழியில் நம் சிந்தனையை செலுத்தி நற்செயல்களையே செய்து அவை மற்றவர்களும் பயனடையும்படி செய்யும் பொழுதுதான் நாம் கல்வி கற்பதற்கான பலனை முழுமையாக அடைவோம்.

Victory King (VK)

Monday, October 26, 2020

கர்வம் அடக்குவோம்!

 Status 382

இந்த விஜயதசமி நன்னாளில் நாம் சரஸ்வதி தேவியை வணங்கி கற்றவர் கல்லாதவர்களுக்கு கற்பித்தல் வேண்டும் அத்துடன் தங்கள் அறிவை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எல்லாம் கற்று விட்டோம்அனைத்தும் நமக்குத் தெரியும் என்ற மமதையில் இருப்பவர்களுக்கு ஒளவை பாட்டி  "கலைமகளே தான் கற்றது கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை" என்று கூறுகிறாள். எனவே நாம் நம் கர்வத்தை அடக்கி  அறிவை மென்மேலும் வளர்த்து நாமும் பயன் அடைவோம் மற்றவர்களும் பயனடையச் செய்வோம். கல்விக்கு இல்லை எல்லை என்பதை உணர்வோம்.

Victory King (VK)

Sunday, October 25, 2020

செய்யும் தொழிலே தெய்வம்!

 Status 381

செய்யும் தொழிலே தெய்வம். அந்த தெய்வத்தை போற்றி வணங்குவதற்காக தான் இந்த நவராத்திரி விழா. நமக்கு அறிவை கொடுக்கும் சரஸ்வதி தேவியையும் அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தைக் கொடுக்கும் லட்சுமி தேவியையும் இவற்றையெல்லாம் பேணிக்காக்கும் தைரியத்தைக் கொடுக்கும் துர்க்கா தேவியையும் வேண்டி வணங்கி போற்றி இந்த முப்பெரும் தேவிகளின் அருள் நமக்கு தொடர்ந்து கிடைக்க பிரார்த்திப்போம். நாம் எந்த தொழில் செய்தாலும் அது நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்பதை மனதில் கொண்டு அந்த தொழில்தான் நாம் வணங்கும் தெய்வம் என்பதை உணர்ந்து அதற்கான உரிய மரியாதையை தந்து உழைப்பின் பலனை முழுமையாக அடைவோம். நாளைய விஜயதசமி நன்னாளில் நம் அறிவுச் செல்வத்தை மேலும் பட்டை தீட்டி வாழ்க்கையில் முன்னேறுவோம்

Victory King (VK)

Saturday, October 24, 2020

சரஸ்வதி தேவி அருள் பெறுவோம்!

Status 380

கல்விச் செல்வம் அருள கன்னியாக அமர்ந்த தேவி..! கூத்தனூர் சரஸ்வதி.இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள். தமிழகத்தில் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது.

ஸ்தல வரலாறு

உயர்கல்வி, நல் ஞானம் ஆகியவற்றை அருள்புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட்டு அருள் பெறுவோம்.

Victory King (VK)

கூத்தனூர் கோயில் செல்லும் வழி!

கூத்தனூர் சரஸ்வதி கோயில் மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே  உள்ளது.

Friday, October 23, 2020

லலிதாம்பிகை அருள்பெறுவோம்!

 

Status 379

திருமீயச்சூர்  லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருவாள். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீளச் செய்வாள். வாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் அருள்புரிவாள். 

கோயில் ஸ்தலவரலாறு 

இந்த நவராத்திரி நன்னாளில் திருமீயச்சூர் அன்னை லலிதாம்பிகை வழிபட்டு
அவள் அருள் பெற்று நலமாக வாழ்வோம் 

Victory King (VK)


கோயிலுக்கு செல்லும் வழி!

ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர் திருவாரூரில் இருந்து 25கிமீ தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 18கிமீ தொலைவிலும் கோவில் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து 33கிமீ தொலைவில் உள்ளது. திருவாரூர் –மயிலாதுறை பேருந்துகள் பேரளம் வழியாக செல்லும். பேரளத்தில் இறங்கி 1கிமீ நடந்து இத்திருக்கோவிலை அடையலாம்.

---***---

Thursday, October 22, 2020

கடந்து வந்த பாதையை மறவோம்!

Status 378

 நாம் பிறக்க காரணமானவர், நாம் கல்வி கற்க உதவியவர், அல்லல்படும் நேரத்தில் உணவு அளித்தவர், ஆபத்துக்காலத்தில் நம்மோடு இருந்தவர், தன்னை மறந்து நம்மை நேசித்தவர் இவர்கள் அனைவரும் நமக்கு தந்தையே. இவர்களுக்குச் செய்யும்  நன்றிக்கடன் ஆயிரம் தெய்வங்களுக்குச் செய்யும்தொண்டினை விட மேலானது.

சாணக்கியர்

நாம் ஏழ்மை நிலையிலிருந்து இந்த உயர்நிலை அடைவதற்கு நாம் கடந்து வந்த பாதையில் தடுமாறும் பொழுது நம்மை தூக்கி நிறுத்தியவர்களையும் வறுமையில் வாடும் பொழுது ஆறுதல் சொல்லி அரவணைத்தவர்களையும் ஊக்கம் அளித்து நம்மை உயர்த்தியவர் களையும்  மனதார நினைவில் பதித்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் தடம் மாறாமல் இடர்பாடுகள் இல்லாமல் இனிதே கடக்க முடியும். நம் நிகழ்காலமும் எதிர்காலமும் நாம் கடந்து வந்த பாதையின் உயிர்நாடி என்பதை நாம் உணர வேண்டும்.

Victory King (VK)

Wednesday, October 21, 2020

வினை விதைத்தவன்...

 Status 377

வேப்பமரத்தைக் கிளை முதல் வேர்வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. அதுபோல் தீய குணம் கொண்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாணக்கியர்

அடுத்தவன் குடும்பத்தை அழித்து வாழ்பவனும் சுயநல மிகுதியால் அடுத்தவர்களுக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டு சொல்லியும் திருந்தாத துரோகிகளுக்கு தங்கள் குடும்பமும் வம்சமும் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரவேண்டும். அப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் வாழ்க்கையில் மீளமுடியாத தண்டனையிலிருந்து தப்பவே முடியாது

Victory King (VK)

Tuesday, October 20, 2020

நல்லதே நடக்கும்!

 

Status 376.               

நன்மைகளையே செய்து மனத்தூய்மையுடன் மனதார கலியுக தெய்வம் காஞ்சி மகாபெரியவரை பிராத்தித்து நம் குறைகளை அவர் முன் வைத்தால் அதன் தீர்வுக்கான வழிமுறைகள் நம்மை வந்து அடைய அவர் அருள் பெற்று நல்லதே நடக்கும். நலம்பெற வாழ்வோம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Victory King (VK)

Monday, October 19, 2020

திருமாலின் அவதாரங்கள்!

 Status 375

திருமால் மச்சாவதாரத்தில், சோமுகாசுரன் திருடிச்சென்ற வேதங்களை  திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 

வராக அவதாரத்தில் இரண்யாட்சன் என்ற அசுரனை   பூமியை தோண்டிச் சென்று அவனை அழித்தார்.  

நரசிம்ம அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்ற இரண்யனைக் கொன்றார். 

ராமாவதாரம் எடுத்து தலைக்கனத்தால் தகாத செயல்களை செய்து வந்த சிவபக்தனான ராவணனையே வதம் செய்தார்.

எனவே இந்த கலியுகத்தில் சுயநலத்திற்காக அடுத்தவர் குடும்பங்களை அழித்து அடாத செயல்களில் ஈடுபட்டு வரும் கயவர்களை இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து  அவர்கள் குடும்பத்தை அழிப்பது உறுதி.

Victory King (VK)

Sunday, October 18, 2020

எதிர்காலத்துக்காக சிந்திப்போமே!

Status 374

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்களாகும்

சாணக்கியர்

வயதான காலத்தில் மனைவி-கணவனை இழப்பதும் கணவன்-மனைவியை இழப்பதும் துரதிஷ்டவசமானது என்றாலும் நமது விதிப்படி கர்மவினையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும. ஆனால் நாம் நல்ல நிலையிலேயே இருக்கும் பொழுது அனைவரையும் நம்பி பணத்தை இழப்பதும் தனக்கென பணத்தை சேமித்து வைக்காமல் இருப்பதும்தான் நாம் செய்யும் மகா தவறு. இதுதான் உண்மையிலேயே துரதிஷ்டமானது. எனவே முதுமையில் கவலையின்றி இருக்க நம்மை நாம் காத்துக்கொள்ள மற்றவர்கள் நம்மை மதிக்க நாம் நலமுடனும் வளமுடனும் இருக்கும்பொழுதே நமக்காகவும் ஓரளவு பணத்தை சேமித்து வைத்துக்கொள்வதுதான் நமக்குப் பெருமை.

Victory King (VK)

Saturday, October 17, 2020

தவறுகளை திருத்திக்கொள்வோம்!

 Status 373

தவறு செய்பவர் மட்டுமல்ல அந்த தவறை தட்டிக் கொடுப்பவரும் அதை கண்டும் காணாமல் செல்பவரும் தண்டனைக்கு உரியவரே!

கிருஷ்ண பரமாத்மா

அதிலும் தவறு செய்பவர்கள், அதனை தூண்டுபவர்கள், தட்டி கொடுப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து விட்டால் அவர்கள் குடும்பம் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொண்டாள் புத்திசாலித்தனம்.

Victory King (VK)

Friday, October 16, 2020

விருந்தோம்பல்!

 Status 372

உணவை சமைப்பது ஒரு கலை. சுகாதாரமான சூழ்நிலையில் சுத்தமாகவும் சுவை மிகுந்ததாகவும் சத்துள்ளதாகவும் ஈடுபாட்டுடன் சமைத்து முக மலர்ச்சியுடன் பரிமாறும் பொழுது உண்பவர்களுக்கும் சமைத்துப் பரிமாறுபவர்களுக்கும் இருக்கும் மன திருப்தி சொல்லில் அடங்கா. அதுபோல் நம் கையாலேயே சமைத்து பசிப்போர்க்கு வயிறார உணவளித்து நாமும் மகிழ உண்பவர்கள் உள்ளங்களும் குளிரும் பொழுது குடும்பமே சுபிட்சத்தில் தழைத்தோங்கும். அதுபோல் வாயில்லா ஜீவன்களுக்கும் பறவைகளுக்கும் அதற்கேற்ற உணவுகளை அளித்து மகிழ்ந்தால் நம் வாழ்வு வளம் பெறும். இன்றைய உலக உணவு தினத்தில் இதனை உறுதி எடுத்து செயல்படுவோமே!

Victory King (VK)

Thursday, October 15, 2020

டாக்டர் அப்துல் கலாம்!

 Status 372

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்

டாக்டர் அப்துல் கலாம்

அதுபோல்தான் தவறு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்து திருந்தும் பொழுது நல்லவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைகணம் பிடித்த ஆணவக்காரர்கள் முட்டாள்களாகவும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டும் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறார்கள். எனவே நம் தவறுகளை உணர்ந்து நாம் நலமாக வாழ்வோம்

Victory King (VK)

Wednesday, October 14, 2020

தீயவை விலகி நல்லவை அணுக!

 Status 371

மறந்தும்கூட மற்றவர்களுக்கு கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

(குறள் 204)

தீயவற்றைப் பார்க்காதே! தீயவற்றைப் பேசாதே! தீயவற்றைக் கேட்காதே!  தீயவற்றிலிருந்து நாம் விலகியிருந்தாலே போதும். நல்லவைகள் தானாய் நம்மை வந்தடையும் என்பதுதான் காந்தியடிகள் தெரிவிக்க விரும்பிய சித்தாந்தம்.

இதற்கு மேலும் அடுத்தவர்களுக்கு தீங்கிழைத்து தாம் மட்டும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. எனவே சிந்திப்போம். சிறப்பான வாழ்க்கையை அனுபவிப்போம்.

Victory King (VK)

Tuesday, October 13, 2020

மகாகவி போற்றி வணங்கிய காளி!

 


Status 370

காலமும் நேரமும் காளி தேவியின் கையில்..!

காளி தேவி காலசொரூபி. காலத்தை கணிப்பவள். ‘எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருவேன்' என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதை அப்படியே முழுமையாக செய்து காட்டுபவள்தான் காளி தேவி. அதர்மம், எங்கே தலைவிரித்தாடுகிறதோ அங்கே அழிவை ஏற்படுத்துவாள். மோசக்காரர்களை நாசம் செய்வாள். அக்கிரமக்காரர்களை காலம், நேரம் பார்த்து அடியோடு அழித்துவிடுவாள். நல்லவர்களுக்கு நன்மையே செய்வாள் அந்த மகாகாளி.

மகாகவி பாரதி 

மகாகவி போற்றிய  காளியை வணங்கி நம் கஷ்டங்களிலிருந்து விடுபெற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Monday, October 12, 2020

புயலும் பூந்தென்றலும்!

 Status 369

நேற்றைய புயலை நினைத்து இன்றைய பூந்தென்றலுக்காக ஜன்னல்களை அடைக்க மாட்டான் புத்திசாலி.

சாணக்கியர்

புயலுக்காக அடைக்கப்பட்ட ஜன்னல்களினால் நடப்பதை அறிய முடியாத சுயநலவாதிகள் இன்றைய பூந்தென்றலையும் அனுபவிக்க முடியாமல்  புயலையே நினைத்து நினைத்து புழுங்கி புத்தி பேதளிப்பதுதான் மிஞ்சும். எனவே பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளாமல் இயற்கையோடும் நம்மை சார்ந்தவர்களோடும் சேர்ந்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

Sunday, October 11, 2020

நினைப்பது நடக்கும்!

 Status - 368

நீ நினைப்பதுபோல் நிச்சயமாக ஒரு நாள் உன் வாழ்க்கை மாறும்... கவலை விடுத்து முன்னேறு... ஏற்படுகின்ற கஷ்டங்கள் உன் வாழ்வை வளமாக்குவதற்காகவே.

கிருஷ்ண பரமாத்மா

அந்த நன்னாளை எதிர்பார்த்து எதிரிகளை நேர் வழியில் எதிர்கொண்டு மனதை திடமாக்கி மகிழ்வுடன் வாழ்வோம்.

Victory King (VK)

Saturday, October 10, 2020

நம் நிலை நாம் அறிவோமே!

 Status 367

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது. 

கண்ணதாசன்

நம் எண்ணங்களும் ஆசைகளும் நம் நிலைமைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். நம் எண்ணங்கள் எல்லை மீறி செயல் வடிவத்தில் அடுத்தவர்களை பாதிக்கும் பொழுது அது ஆபத்தில் தான் முடியும். "தன் வினை தன்னைச் சுடும்". 

மனசாட்சி உள்ளவர்கள்தான் இதை உணர முடியும். இல்லையேல் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் பொழுதாவது உணர்ந்தால் சரி. "பேராசை பெருநஷ்டம்"

Victory king (VK)

Friday, October 9, 2020

வாய்மையே வெல்லும்!

 Status 366

பொய் என்ற கவசம் தன்னை காக்கும் என்று நம்புகின்றனர்... அதை உண்மை எனும் அஸ்திரம் உடைத்தெறியும் என்பதையும் மறந்து..!

கீதையில் கிருஷ்ணர்

பொய்யால் கிடைக்கும் புகழ் பெருமை வெற்றி அனைத்துமே ஒரு மாயைதான். உண்மை வெளிவரும் பொழுது அதன் தாக்கத்தை நம்மால் தாங்க முடியாது. உண்மை எப்பொழுதுமே நிலைத்து நின்று நம் மதிப்பை மேலும் மேலும் உயர்த்துவதுடன் பொய்மையால் நம்மை விழ்த்த நினைப்பவர்களை பொடி பொடியாக்கிவிடும். இறுதியில் உண்மைதான் வெல்லும்.

VictoryKing (VK)

Thursday, October 8, 2020

நல்வினையும் தீவினையும்!

 Status 365

ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும்பொது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை!

பட்டினத்தார்

நமக்கு நாமே ராஜா என்ற ஆட்டம்போடும் மனிதர்களின் சுயரூபம் தங்கள் ஆட்டம் அடங்கும் தருவாயில் மற்றவர்களால் தூற்றப்படுவதுதான் இயற்கை. அந்நிலை வரும்பொழுது நம்மால் குனிந்த தலை நிமிர முடியாது. மற்றவர்கள் தயவின்றி வாழலாம்  என்று நினைக்கலாம். நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் சாபத்திலிருந்து நாம் மீளமுடியாது. நாமும் நம் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நன்மையை செய்யா விட்டாலும் தீவினைகள் செய்யாதிருந்தால் நாம் நலமுடன் வாழ வாய்ப்பு உண்டு

Victory King (VK)

நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோமே!

 Status 364

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

 புலி பதுங்குவது பயத்தினால் அல்ல!

பழமொழிகள்

பேசும்பொழுது அடுத்தவர் ஊமையாக இருந்தால் அவர் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. நம்மை கூர்ந்து கவனித்து சரியான இடத்தில்  கடிவாளம் போட காத்திருக்கிறார் என்று பொருள். எனவே எதிராளியை ஏளனமாக நினைத்து பேசுவதை விடுத்து நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

Tuesday, October 6, 2020

குற்ற உணர்ச்சி!

 Status 363

குற்ற உணர்ச்சி:

இது ஒரு புனிதம். இந்தப் புனிதத்தை உணராமல் மற்றவர்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் செய்து கொண்டு அவர்கள் வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு சற்றும் குற்ற உணர்வே இல்லாமல் திரிந்து கொண்டிருக்கும் கொடூரமான மனித மிருகங்கள் திருந்த வேண்டும் என்றால் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவராவது நல்ல உள்ளம் படைத்தவராக இருத்தல் வேண்டும். இல்லையேல் தன் செயலால் அவர்கள் குடும்பமே அழியும் பொழுதாவது  உணர முடியுமா என்பதும் சந்தேகம்தான். எனவே மனித நேயத்தோடு வாழ்வோம். மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்போம். நமது குடும்பத்தை வம்சத்தை காப்போம்

Victory king (VK)

Monday, October 5, 2020

மானிட ஜென்மம்!

 Status 362

அன்பு படர்ந்த கொடியினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும்; அதன் அழகைக் குலைக்க மேவும்; கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்; சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா!

கண்ணதாசன்

அகந்தையில் தறிகெட்டு தடுமாறி செய்யொன்னா காரியங்களை செய்து களித்து வாழும் ஆறறிவு படைத்த மானிட ஜென்மத்தின் நிலையும் கடைசியில் இந்தக் குரங்கின் நிலைதான்.

Victory King (VK)

Sunday, October 4, 2020

காரியத்தடைகள் அகல!


 
Status 361

காரியத்தடைகள் அகல  நம்மைச் சுற்றி இருக்கும் ஆபத்துகள் நம்மை நெருங்காமல் இருக்க பாதுகாப்பான வளையமாய் இருப்பது சரபேஸ்வரர் வழிபாடு.

விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும்  சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.

Victory king (VK)

Saturday, October 3, 2020

தவறுகளும் தண்டனைகளும்!

 Status 360

ஆணவம் அகங்காரம் கொண்டு தேவர்கள சிறைபிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்த  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்கிறார். அதுபோல இரணியனின் அட்டகாசம் பொறுக்காமல் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்கிறார். இந்த கலியுகத்தில் கொடூர புத்தி உள்ளவர்களையும் மற்றவர்களை அழித்து வாழும் அற்பப் பதர் களின் வம்சத்தையே வதம் செய்ய இறைவன் அவதார புருஷனாக வராவிட்டாலும் அவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

Victory King (VK)

Friday, October 2, 2020

அகந்தையின் அழிவு நிச்சயம்!

 Status 359

சிவபக்தனான ராவணன் சிவனிடம் தவம்புரிந்து சாகாவரம் பெற்று தான் என்ற அகங்காரத்தில் தகாத காரியங்கள் எல்லாம் செய்து வந்தான். எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றவன் மனிதனால் தன்னை என்ன பண்ண முடியும் என்ற இருமாப்பில் அந்த வரத்தை கேட்காததால் மகாவிஷ்ணு தன்னுடைய ராமாவதாரத்தில் ராவணனை வதம் செய்கிறார். இப்பேற்பட்ட ராவணனுக்கே இந்நிலை வந்தது. எனவே அகந்தையில் அக்கிரமம் செய்யும் யாராகிலும் கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அக்கிரமக்காரரின் வம்சத்தையே அழித்துவிடுவார் என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Victory King (VK)

Thursday, October 1, 2020

வலியாரை தெய்வம் அடிக்கும்!

 Status 358

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.

பழமொழி                     

இது ஓர் உயிர் மொழி.இன்று நம்மிடம் பலம் இருக்கிறது என்று எண்ணி மற்றவர்கள் மனதை காயப்படுத்தி தொல்லைகள் கொடுக்கும் துரோகிகளுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனையிலிருந்து  மீள முடியாது. நமது அட்டகாசம் அத்து மீறும் பொழுது கடவுள் அசுரனை போல் வந்து நம்மை நாசப்படுத்தி விடுவார். இதனை மனசாட்சி உள்ளவர்கள் உணர்ந்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்புண் டு. இல்லையேல் அழிவுகாலம் அருகில் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

Victory King (VK)

Wednesday, September 30, 2020

மனிதப் பிறவியின் பயன்!

Status 357

மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லி அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து வாழ்பவர்கள் வீடு ஒருவருக்கும் பயன்படாமல் போகும். அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும். வெள்ளெருக்கு பூப்பூக்கும். பாதாள மூலி என்ற கொடிய விஷம் உள்ள கொடி வளரும். மூதேவி அத்தகையோர் வீட்டில்தான் வாழ்வாள். அந்த வீடுகளில் பாம்புகள்தான் வசிக்கும். மனதில் ஒன்று வைத்து ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசுவது கயவர்களின் குணம்.   உள்ளத்தில் ஒரு கருத்தை மறைத்து வெளியே வேறு கருத்துச் சொல்லும் கயவர்களின் உறவே எனக்கு வேண்டாம்!’ 

- முருகப் பெருமானை வேண்டுகிறார் ராமலிங்க வள்ளலார்.

இத்தகைய கொடிய விளைவுகள் வரும் என்று தெரிந்தும் நாம் மனதளவில் திருந்தவில்லை என்றால் மனித ஜென்மம் எடுத்ததே பாழ்.

Victory King (VK)

Tuesday, September 29, 2020

முயற்சியை கைவிடோம்!

 Status 356

முயற்சியை விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.சிந்திப்போம் செயல்படுவோம் நாளை நமதே!

சுவாமி விவேகானந்தர்

முயற்சி என்பது நம் ஊக்க சக்தி. அதில் எந்தவித தளர்வும் இன்றி முன்னேறிக் கொண்டே இருந்தால் அதன் பலன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு கிடைத்தே தீரும். அது நாம் எதிர்பார்த்த ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது எதிர்பாராத மேன்மை உடையதாகவும் இருக்கலாம் அல்லது நமக்கு ஒரு முன் அனுபவமாகவும் அமையலாம். எனவே நாம் முயற்சியை மூலதனமாக்கி முன்னேறி வாழ்க்கையில் வளம் பெறுவோம்! 

Victory King (VK)

Monday, September 28, 2020

கர்மவினைகள்!

 Status 355

ஒரு மந்தையில் ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக் குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்மவினை அவனிடம் வந்து சேரும்.

சாணக்கியர்

கர்மவினை என்பது நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் பலனே. எனவே நாம் எந்த கர்ம வினையில் இருந்தும் தப்ப முடியாது. அதனை நாம் நன்கு உணர்ந்து விட்டால் நாம் பாவ காரியங்களில் இறங்க மாட்டோம். நன்மையே செய்வோம் அதன் பலனை அனுபவிப்போம்.

Victory king (VK)

Sunday, September 27, 2020

வாழ்க்கையில் உயர்வதற்கு சிந்திப்போமே!

 Status 354

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

சுவாமி விவேகானந்தர்

நம் வெற்றி நம் சாதனையால் ஏற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் செயலில் குறை கூறுவதால் நாம் சாதனையாளராக ஆகிவிட முடியாது. நம் தகுதியை நாம் நிரூபித்து அதனை மற்றவர்கள் கூறவேண்டும். எனவே அடுத்தவர்களை குறை கூறுவதை விடுத்து நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்போம்

Victory King (VK)

Saturday, September 26, 2020

தோன்றின் புகழோடு தோன்றுக!

 Status 353

தோன்றின் புகழோடு தோன்றுக! 

இதை SPB-ன் இறுதி மரியாதை ஒளிபரப்பை பார்த்த பிறகாவது நாம் அனைவரும் உணர வேண்டும். 

நாம் இறந்த பிறகு நம்மைப் பற்றி நான்கு பேராவது நல்லபடி கூறவேண்டும். அதுதான் மானிடப் பிறவியின் பயன். எனவே நமக்கு கிடைத்த புனிதமான இப் பிறவியில் நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீது நினைக்காமலும் குரோத எண்ணங்களோடு வாழாமலும் அடுத்தவனை அழிக்காமலும் வாழ்ந்தாலே போதும். ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் ஆகாத நிலையில் ஒரு பிடி சாம்பல் தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து பண்போடு வாழக் கற்றுக் கொள்வோம்.

Victory King (VK)

Friday, September 25, 2020

SBP - க்கு இதய அஞ்சலி

SPB - க்கு இதய அஞ்சலி!

தன் இசைப் புலமையால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஈர்த்து பல்லாயிரக் கணக்கானப் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை பெற்று தனக்கென ஒரு தனி இடத்தை இசை உலகில் பெற்ற உத்தமர் பண்பாளர் இனிய முகத்திற்கு சொந்தக்காரர் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்றாலும் SPB அவர்களின்புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை அழியாது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு இதனை தாங்கும் சக்தியை அளிக்க பிரார்த்தனைகளுடன் SPB அவர்களுக்கு இதய அஞ்சலி.

1971 ல் ஓர் இசைக் கச்சேரரியில் கும்பகோணத்தில் நான் அவரை சந்தித்த இனிய நினைவுகளுடன் இந்த இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலி.

ஓம் சாந்தி!

Victory King (VK)

Thursday, September 24, 2020

பழி பாவத்துக்கு அஞ்சார்!

 Status 352

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்                                      கொள்வர் பழிநாணு வார். 

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

(குறள் 433)

பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் சிறிதும் கவலைப்படாமல் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே இருந்தால் அதன் வினையை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. தண்டனைகளில் இருந்து தப்பவே முடியாது. உணர்ந்து செயல் பட்டால் உண்டு நல் வாழ்வு.

Victory King (VK)

Wednesday, September 23, 2020

கண்களின் மொழி!

 Status 351

'கண்களின் மொழி' - கண்கள் வலப்புறம் பார்த்தால் பொய் சொல்கிறது. இடப்புறம் பார்த்தால் உண்மை பேசுகிறது. மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. கீழே பார்த்தால் அடி பணிக்கிறது. எங்கோ பார்த்தால் தவிக்கிறது. வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. மூக்கை பார்த்தால் கோபப்படுகிறது.

ஒரு கவிஞனின் வரிகள்

ஒருவருடைய கண் பார்வையை வைத்து அவருடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பதனால்தான் தவறு செய்பவர்கள் நம் முன் நேருக்கு நேர் பேச தயங்குகிறார்கள். எனவே குற்றவாளிகள் தப்பிக்க என்ன முயற்சி செய்தாலும் அவர்கள் கண்களே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதனை நன்கு உணர்ந்தால் குற்றம் புரிபவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு.

Victory King (VK)

Tuesday, September 22, 2020

மகள்கள்!

 Status 350

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது பெருமைமிகு பெற்றோர்களாய் திகழ்வது அரிது. அதனினும் அரிது, பெண் மகவைப் பெற்றெடுத்தல். இத்தகைய பெருமை மிகுந்த மகளாய் பிறந்து குலவிளக்காய் திகழ்ந்து குடும்பத்தை குதூகலிக்க வைத்துக்கொண்டிருக்கும்  மகள்கள் அனைவரும் நல்ல அறிவாற்றலுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து குடும்பத்திற்கும் ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்து கொடுக்க இந்த உலக மகள்கள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அனைத்து பெற்றோர்களின் சார்பிலும் மனமார வாழ்த்தும்...

Victory king (VK)

Monday, September 21, 2020

முடிந்ததை செய்வோமே!

 Status 349

நம்மை நம்பி வந்தவருக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அன்புடனும் பண்புடனும் பேசி ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லி அவர்கள் நலனை விசாரித்து நம்மால் என்ன முடிந்ததோ அதை அளித்து வாயார வாழ்த்தி வழியனுப்பினாலே அவர்கள் அகமகிழ்ந்து நம்மை வாழ்த்தி வணங்கி விடை பெறுவார்கள். முடிந்ததை முகமலர்ச்சியுடன் செய்து நாமும் அகமகிழ்வோமே!

Victory king (VK)

Sunday, September 20, 2020

கோழிக்குத்தி வானமுட்டி பெருமாள்!

 Status 348

ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் செய்த வானமுட்டி பெருமாள் கோழிக்குத்தி  என்ற கிராமத்தில் அத்திவரதராக விஸ்வரூப தரிசனம் அருள்கிறார்.

'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்றும் சனி தோஷம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள் பக்தர்கள். 

இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மூவலூரிலிருந்து வலது பக்கம் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வானமுட்டி பெருமாள் என்ற அத்திவரதரை தரிசித்து பயனடைவோம்.

Victory king (VK)


Saturday, September 19, 2020

சிந்திப்போம் செயல்படுவோம்!

 Status 347

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணி விடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி

புத்தர்

ஒருவர் பேசும் பொழுது நாமும் அதனுடனே பேசினாலோ அவர் பேசி முடிப்பதற்குள் நாம் பேச ஆரம்பித்தாலோ வந்தவர் கருத்தையும் நாம் சொல்ல நினைக்கும் கருத்தையும் இருவருமே புரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே அமைதியாக இருந்து அடுத்தவர் பேசுவதை நிதானமாக கேட்டு அதற்கு தகுந்தார் போல் நாம் பேசும் போது தான் அந்த உரையாடலுக்கு ஒரு உயிர் கிடைக்கும். பொதுவாகவே நாம் பேச்சைக் குறைத்து நன்கு சிந்திப்பதில் கவனம் செலுத்தி ஒரு செயலை செய்யும் பொழுது அது முழுமையாக வெற்றி பெறும்.. எனவே சிந்திப்பதில் கவனம் செலுத்துவோம். எண்ணிய செயல்களை எளிதாக முடிப்போம்.

Victory king (VK)

மனிதநேயம்!

 Status 346

யாரென்றே தெரியாத  ஒருவர் அழும் பொழுது காரணமே இல்லாமல் நம் கண்களும் கசியமானால் அதுதான் மனித நேயம்

அன்னை

ஏழை பணக்காரன் மேலோர் கீழோர் என்ற பாகுபாடின்றி மனிதநேயத்துடன் இருப்பதுதான் பண்பு. இருப்பினும் அவரவர்கள் தங்கள் எல்லையை மீறாத வரையில் பண்பின் இலக்கணம் புனிதமாகும்.

Victory king (VK)

Thursday, September 17, 2020

குறையும் நிறையும்!

 Status 345

இந்த உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்ததும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.

சாணக்கியர்

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இதில் நானோ நீங்களோ விதிவிலக்கல்ல. நல்லவைகள் நடக்கும் பொழுது சந்தோஷப்படுவது போல் துன்பங்கள் வரும் பொழுது அதனை கண்டு துவளாமல் இதுவும் கடந்து போகும் என்று மனதார எண்ணி இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தால் நாம் எக்காலத்தும் நிம்மதியாக வாழ முடியும்.

Victory king (VK)

Wednesday, September 16, 2020

தன்வினை தன்னைச் சுடும்!

 Status 344

அடுத்தவன் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடே உன் தலையில் விழும்

சாணக்கியர்

தன் வினை தன்னைச் சுடும், கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிகளுக்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலிப்பும் நம்மையே வந்தடையும். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப தான் நம் வாழ்வு அமையும். எனவே நல்லவற்றையே எண்ணத்திலும் செயலிலும் காண்பிப்போம். நற்பலனையே பெற்று நலமுடன் வாழ்வோம்.

Victory king (VK)

Tuesday, September 15, 2020

நாவடக்கம்!

 Status 343

ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் ஆற்றல்மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.

புத்தர்

ஆயுதங்களால் ஏற்படும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும் என்பது ஒரு பழமொழி. நாவை நம் கண்ட்ரோலில் வைத்திருந்தால் அதைவிட உயர்ந்தது ஒன்றுமில்லை. நாவின் கண்ட்ரோலில் நாம் இருந்தால் அதைவிட தீயதும் ஒன்றுமில்லை. எங்கும் எப்போதும் எவரிடத்திலும் நாம் நாவடக்கத்தோடு பேசினால் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறராலும் போற்றப்படுவோம்.

VictoryKing (VK)

Monday, September 14, 2020

லட்சியப் பாதை!

 Status 342

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தான்கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது.

பகவத்கீதை

நம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை கொண்டு அதனை அடைய நேர்வழியிலும் பண்போடும் செயல்பட்டு அந்த லட்சியத்தை நோக்கி பீடுநடை போட்டால் இடையில் எந்த இடர்பாடுகள் வந்தாலும் இன்னல்கள் வந்தாலும் அதனை தூள் தூளாக்கி வெற்றி அடைவதுடன் மன நிறைவோடும் மகிழ்வோடும் வாழ்க்கைப் பயணம் இனிதாக செல்லும்.

Victory King (VK)

Sunday, September 13, 2020

உலக தாத்தா பாட்டி தினம்

 Status 341

பேரப்பிள்ளைகளை அன்போடு அரவணைத்து அகமகிழும் தாத்தா பாட்டிகளுக்கும், உறவுகளின் வலிமையை உணரும் வண்ணம் பிள்ளைகளை வளர்த்த பெற்றோர்களுக்கும் உறவுகள் என்ற சங்கிலித்தொடர் சிறிது சிறிதாக விலகி வரும் இந்நாளில் "உலக தாத்தா பாட்டி தினம்"என்ற செய்தி மூலம் உறவுகளின் மகிமையை நம் இளைய தலைமுறையினருக்கு உணரச் செய்யும இந்நாள் ஒரு பாலமாக அமையட்டும் எனக்கருதி மனமகிழ்ந்து வாழ்த்துக்களை கூறும்

Victory King (VK)

Saturday, September 12, 2020

இறைவனை சரணடைவோம்!

 Status 340

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்? கவலையை விடுங்கள் வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்

அன்னை தெரசா

கவலை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அந்த மனது கவலைப்படும் பொழுது ஒரு ஆறுதலை தேடும். அந்த ஆறுதலுகுத்தான் நமக்கு கண்கள் இருக்கிறது கண்ணீர்விட. கைகள் இருக்கிறது கண்ணீரைத் துடைக்க. பேசும் திறன் இருக்கிறது புலம்பி இறைவனைத் தொழ. இவை அனைத்தும்  நமது மன அழுத்தத்தை குறைத்து கவலைகளின் தன்மையை குறைக்கிறது. இவையே கவலைகளில் இருந்து வெளிவருவதற்கு நமக்கு இயல்பாக கிடைக்கும் மருந்து. இறைவனை சரணடைவோம் கவலைகளில் இருந்து விடுபடுவோம்.

Victory King (VK)

Friday, September 11, 2020

எண்ணிய முடிதல் வேண்டும்!

 Status 339

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்

மகாகவி பாரதியார் 

அன்னை பராசக்தியிடம்வேண்டி பாரதி பாடிய இப்பாடல் எக்காலத்தும் எல்லா தரப்பினருக்கும் பொருந்தும். கடவுளிடம் நாம் வேண்டுவதிலும் ஒரு கண்ணியம் வேண்டும் என்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துரைத்த காவியத்தலைவன் மகாகவியின் பெருமையை அவரின் நினைவு நாளான இன்று போற்றி அவர் அறிவுரைகளை நாமும் கடைபிடித்து வீறு நடை போடுவோம்

Victory King (VK)

Thursday, September 10, 2020

எல்லாம் அவன் செயல்!

 Status 338

பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும். மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

காஞ்சி மகாபெரியவர்

நமக்கு நடப்பது அனைத்தும் இறைவன் கொடுத்த வரம்தான். எனவே நாம் மனம் உருகி இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுககளில் இருந்து விடுபடுவதுடன் நமக்கு மன நிம்மதியும் நடக்க இருப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும். அனைத்தும் அவன் அருள் என்று நினைப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

Victory King (VK)

Wednesday, September 9, 2020

நம்பிக்கை வைப்போம்!

 Status 337

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

சுவாமி விவேகானந்தர்

எந்த நிலையிலும் எந்த  செயலிலும் நம் தைரியத்தை விட்டுவிடாமல் நாம் முழு நம்பிக்கையுடன் அதில் ஈடுபட்டால் நம்மால் முடியாதது என்பது ஒன்றுமில்லை. நமது பலமே தன் நம்பிக்கையில்தான் இருக்கிறது. மனோதிடமே மனித பலம்.

Victory King (VK)

Tuesday, September 8, 2020

செய்வதை ஈடுபாட்டுடன் செய்வோமே!

 Status 336

நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த ஒரு செயலை செய்யும் போதும் அதில் பிடிப்பில்லாமல் செய்தால் முழு வெற்றியை காண்பது கடினம். அதே செயலை மனமுவந்து ஈடுபாட்டுடன் செய்யும்பொழுது அந்த செயலில் ஒரு நேர்த்தியும் எதிர்பார்த்ததைவிட அதில் வெற்றியை காண்பதுடன் நமக்கு ஒரு மன மகிழ்வையும் கொடுக்கும். நாம் செய்யும் செயலுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடுதான் முக்கியம்.

Victory king (VK)

Monday, September 7, 2020

உழைத்து வாழ்வோம்!

 Status 335

துருப்பிடித்து தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.

சுவாமி விவேகானந்தர்

நாம் எந்த வேலையையும் செய்யாமல் அடுத்தவர் உழைப்பில் பிழைப்பை நடத்தி, தனக்கு வாய்த்ததை விடுத்து அடுத்தவர்களை கெடுத்து பிழைப்பு நடத்தி, தன் மூளைக்கு வேலை கொடுக்காமல் அதனை மழுங்கடித்து நடைபிணமாக வாழ்வதை போல ஒரு கேவலமான செயல் வேறொன்றும் இல்லை. எனவே இறைவன் நமக்கு அருளிய பொக்கிஷமான மூளையை சுறுசுறுப்பாக்கி நமக்கு உள்ளதை நாமே அடைய முயற்சித்து வாழ்க்கையில் முன்னேறுவோம்.

 Victory King (VK)

Sunday, September 6, 2020

தன் நலம் பேண பிறரை அழிக்க வேண்டாமே!

 Status 334

நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை ‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

காஞ்சி மகாபெரியவர்

சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை அழிக்க நினைப்பதும் மற்றவர்கள் மனதை நோகடிப்பதும் அது தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும்ஒரு slow poison போல்தான். தான் செய்யும் தீவினைகள் தன்னையே சிறிது சிறிதாக கொன்றுவிடும் என்பதை உணர வேண்டும். எனவே நன்மையே செய்து நற்பலனை அடைவோம்

Victory King (VK)

Saturday, September 5, 2020

ஆசிரியர் தினம்

 Status 333

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமை நிலையிலும் தன் அறிவாற்றலால் நல்ல மாணவனாக பேராசிரியராக பல்கலைக்கழகத் துணைவேந்தராக தன் நிலையை தன் திறமையால் உயர்த்தி பல விருதுகளை பெற்று நம் நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாகவும் இரண்டாவது ஜனாதிபதியாகவும்  பொறுப்பேற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த மாமேதை அறிவுக்களஞ்சியம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த இந்நாளில் இளைய தலைமுறைகளை முன்னேற்றும் சீரிய பொறுப்பை ஏற்றிருக்கும் நல் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அதன் பயனை முழுமையாக நம் இளைய தலைமுறைகள் அடைந்து தங்களை உருவாக்கிய பெருமைமிகு பெற்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும்  மகிழ்வித்து அனைவரும் உயர்நிலைநிலை அடைய மனதார வாழ்த்தும்

Victory King (VK)

Friday, September 4, 2020

துரோகத்தின் சம்பளம் தண்டனை!

 Status 332

நமக்கு துரோகம் செய்பவர்களை அன்பால், பண்பால் திருத்தலாம் என்று முயற்சித்தாலும் அவர்கள் திருந்தாமல் மேலும் மேலும் தன் துரோகச் செயலை செய்து கொண்டே இருநதால் அவர்களுக்கு அழிவு காலம் மிகவும் அருகில் வந்துவிட்டது என்றுதான் பொருள். கடவுள் அவர்கள் துரோகத்தை பார்த்து பார்த்து திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களையும் கொடுத்து கடைசியில் கடுமையான தண்டனையினால் திருத்த முடியும் என்ற ஒரு முடிவுக்கு வந்து அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கிவிடும். குற்றம் செய்பவர்கள் குற்றத்தை உணர்ந்து திருந்தவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை சூனியம் தான். எனவே நமக்கு துரோகம் செய்தவர்களை எண்ணி எண்ணி மனம் வருந்துவதை விடுத்து நம் தீராத துயரத்தை முறையிட்டு இறைவனை சரணடைந்தால் வெற்றி நமக்குத்தான்.

Victory king (VK)

Thursday, September 3, 2020

யாரையும் இழிவாக கருத வேண்டாமே!

 Status 331

அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது.யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

காஞ்சி மகாபெரியவர்

நமது பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். அடுத்தவர்கள் வேலைகளை குறை சொல்லியும் அவர்களை இகழ்ந்து பேசியும் நாம் சிறந்தவர் என்று பறைசாற்றிக்  கொண்டால் அது நிலைத்து நிற்காது. அதனால் நாம் அடையும் கோபங்கள் மற்றவர்களையும் கோபப்படுத்துவதுடன் நம்மையும் நாம் அழித்துக் கொள்கிறோம். எனவே நாம் செய்யும் செயல்களை செவ்வனே செய்வோம். மற்றவர்களையும் பாராட்டுவோம். மகிழ்வோடு இருப்போம்.

Victory King (VK)


Wednesday, September 2, 2020

நம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து!

 Status 330

ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

காஞ்சி மகாபெரியவர்

நாம் நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றை சொல்லி வளர்ப்பதுடன் அவர்கள் நல்லவற்றை பார்த்து வளரும் பொழுது ஒழுக்கத்தின் மேன்மையை நன்கு உணர முடியும். எனவே நாம் நம் பெற்றோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் கொடுக்கும் மரியாதையுடன் நாமும் ஒழுக்க சீலர்களாக வாழும்போது நம் பிள்ளைகள் மனதில் அவை அப்படியே பதிந்து விடும். இவைகளே நம் பிள்ளைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.

Victory King (VK)

Tuesday, September 1, 2020

கருணையும் மனித நேயமும் நம்மை வந்தடைய!

 Status 329

அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்

காஞ்சி மகாபெரியவர்

நம் மன அழுத்தத்தை தவிர்க்க, தீய எண்ணங்கள் நம்மை அண்டாதிருக்க, தீய செயல்களை செய்ய நம் மனம் தூண்டாதிருக்க காஞ்சி மகானின் இந்த அருளுரையை கடைபிடித்தாலே போதும். அன்பு கருணை மனிதநேயம் அனைத்துமே நம்மை வந்து அடையும். கடைபிடிப்போம் அமைதியான வாழ்வை நாம் பெறுவதோடு மற்றவர்களையும் வாழ வைப்போம்.

Victory King (VK)

Monday, August 31, 2020

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

 Status 328               

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்.

கொன்றைவேந்தன்

நம் குற்றத்தை பிறர் விமர்சிக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தால் பிறர் குற்றத்தை அலசி ஆராய மாட்டோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தவறுகள் செய்வது மனித இயல்பு. எனவே அவர்களை நல்வழிப்படுத்தி நமது நட்பு வட்டத்தையும் உறவுகளையும் தக்க வைத்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

Victory King (VK)

Sunday, August 30, 2020

ஊருடன் ஒத்து வாழ்!

 Status 327

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். 'ஊரோடு ஒத்துப்போ' என்று சொல்வார்கள்.  அப்படியில்லாமல், ஊருடன் பகைத்துக்கொண்டால், அவன் பரம்பரைக்கு தீங்கு நேரும். தம் வம்சமே அழிந்துவிட வாய்ப்புண்டு என்கிறார்.

கொன்றை வேந்தன்

ஒளவையின் இந்த அருள்வாக்கு பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய ஒன்று. அனைத்து தரப்பினர்களுக்கும் அனைத்து வயதினர்களுக்கும் பொருந்தும் ஒரு முத்தான பாடல். எனவே நாம் ஒவ்வொருவரும் இதனைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து ஆனந்தமாய் வாழ்வோமே!

Victory King (VK)

Saturday, August 29, 2020

செயலுக்கு முன் தீர்மானம்!

 Status 326

ஒரு மரத்தை வெட்ட எனக்கு 6 மணி நேரம் அளிக்கப்பட்டால் அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியைக் கூர் தீட்டவே பயன்படுத்துவேன்

ஆபிரகாம் லிங்கன்

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான திட்டம் வகுப்பது தான் மிகவும் முக்கியம். தீர்மானித்தல் அதற்கான முழு விவரங்களையும் கேட்டறிதல் வல்லுனர்களின் ஆலோசனை பெறுதல்  முதலீட்டுக்கான திட்டங்கள் வகுத்தல் இவைகள் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு அதற்கான செயல் வடிவம் கொடுத்து முழு மனதுடனும் தளராத நெஞ்சுடனும் நம் உழைப்பை  கொடுத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எடுத்த செயலுக்கான வெற்றி நம்மை வந்து அடைந்தே தீரும்.

Victory King (VK)

Friday, August 28, 2020

வெற்றிக்கு காந்திஜி கூறிய 3 வழிகள்

 Status 325

1. தவறுகளிலிருந்து பாடம் கற்பது. மீண்டும் அதை செய்யாமல் இருப்பது

2. ஒவ்வொரு திட்டத்துக்கும் இலக்கை நிர்ணயிக்கும்போதே அதற்கான தயாரிப்பு காலத்தையும் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு திட்டத்துக்கான மாற்றையும் யோசித்து வைத்துக்கொள்ளுதல்

3. என்ன எதிர்ப்புகள் வந்தாலும் களத்தில் இருந்து விலகாமல் இருப்பது

மகாத்மா காந்தியடிகள் 

காந்தியடிகள் அனுபவப்பூர்வமாக உதிர்த்த இந்த மூன்று மொழிகளையும் நாம் மூல மந்திரமாக எடுத்துக்கொண்டு ஒரு செயலில் ஈடுபட்டால் வெற்றி என்பது நிச்சயம்.

Victory King (VK)

Thursday, August 27, 2020

தீதும் நன்றும்!

 Status 324

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"

 பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"

"அடாது செய்பவன் படாத பாடுபடுவான்"

பழமொழிகள்

இப்படிப்பட்ட உயிருள்ள பழமொழிகளை நம் மனதில் ஏற்றிக் கொண்டுவிட்டால் தீங்கு செய்யும் எண்ணம் நமக்கு மேலோங்கும் பொழுதெல்லாம் இவை ஒரு கேடயமாக இருந்து நம்மை காப்பாற்றும். 

Victory King (VK)

Wednesday, August 26, 2020

ஐந்தில் வளையாதது...

 Status 323

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பழமொழி

நடுத்தர மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து நாம்தான் கஷ்டப்பட்டோம் நம் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றும், பணம் படைத்தவர்களும் உயர் பதவியில் உள்ளவர்களும் தம் பிள்ளைகளை தங்களுடைய தகுதிகளை வைத்து பெருமையாக வளர்த்து விடலாம் என்ற எண்ணத்திலும் பிள்ளைகளுக்கு தங்கள் நிலை தெரியாத வண்ணமும் நல்லவை கெட்டவற்றை சொல்லித் தராமலும் அவர்கள் போக்கிலே பள்ளிப் பருவத்திலிருந்தே விட்டுவிடுவதால் இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த நிலையிலும் எதையும் உணராமல் தங்களைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே தவறுகளை சுட்டிக்காட்டி நல்லவற்றை  எடுத்துச்சொல்லி வளர்த்தால் அவர்கள் வாழ்க்கை நலமாக இருப்பதுடன் நமக்கும் பெருமை

 Victory King (VK)