Wednesday, August 26, 2020

ஐந்தில் வளையாதது...

 Status 323

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பழமொழி

நடுத்தர மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து நாம்தான் கஷ்டப்பட்டோம் நம் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றும், பணம் படைத்தவர்களும் உயர் பதவியில் உள்ளவர்களும் தம் பிள்ளைகளை தங்களுடைய தகுதிகளை வைத்து பெருமையாக வளர்த்து விடலாம் என்ற எண்ணத்திலும் பிள்ளைகளுக்கு தங்கள் நிலை தெரியாத வண்ணமும் நல்லவை கெட்டவற்றை சொல்லித் தராமலும் அவர்கள் போக்கிலே பள்ளிப் பருவத்திலிருந்தே விட்டுவிடுவதால் இப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த நிலையிலும் எதையும் உணராமல் தங்களைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே தவறுகளை சுட்டிக்காட்டி நல்லவற்றை  எடுத்துச்சொல்லி வளர்த்தால் அவர்கள் வாழ்க்கை நலமாக இருப்பதுடன் நமக்கும் பெருமை

 Victory King (VK)

No comments: