Tuesday, August 4, 2020

ஆறறிவு மனிதன்!

Status 301


இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்.
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு


கவிஞர் வாலி


அருமையான கருத்து.அடுத்தவர்களை துன்புறுத்தி ஆனந்தப்படும் பண்பற்ற சுயநலவாதிகள் ஐந்தறிவு படைத்த இந்தப் பறவைகளை பார்த்தாவது சுயநலத்தை விடுத்து அனைவரையும் அரவணைக்கும் பண்பை கற்றுக் கொள்ளட்டும்.


Victory king (VK)


No comments: