Sunday, August 16, 2020

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி!



Status - 313

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்  சுருட்டப்பள்ளி. 

ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில்தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது

பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, தனது மனைவி கவுரியுடன் காட்சியளிக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி,  திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருக்கோயில் வரலாறு 

இந்த பிரதோஷ சிவனையும் தாம்பத்திய  தட்சிணாமூர்த்தியையும்  வழிபட்டு சகல சௌபாக்யத்தையும் பெற்று நலமுடன் வாழ்வோம்

Victory King (VK)

No comments: