Sunday, August 2, 2020

துன்பங்களைக் கண்டு தூர நிற்போம்!

Status 299

பிறரை அழ வைப்பவர்கள் தங்கள் கண்களிலும் கண்ணீர் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. 

கவிஞர் கண்ணதாசன்

பிறருக்கு துன்பம் தந்து மகிழ்பவர்கள் துரோகிகள். எதிரிகளைக் கூட நாம் எதிர்கொண்டு விடலாம் ஆனால் துரோகிகளை போல கொடூரமானவர்களை
எதிர்கொள்வது மிகவும் கடினம்.அவர்கள் எப்பொழுது புற முதுகில் குத்துவார்கள் என்று கணிக்க முடியாது. மற்றவர்கள் கண்ணீரை பன்னீராக நினைக்கும் துரோகிகளுக்கும் கண்ணீரின் வலியை உணரும் காலம் வந்தே தீரும். எனவே நாம் எக்காலத்தும் எந்த சூழ்நிலையிலும் துரோகிகளுக்கு துணை போகாமல் அவர்களிடமிருந்து விலகி இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

Victory King (VK)

No comments: