Tuesday, August 25, 2020

பெரியோர்களே முன் உதாரணம்!

 Status 322

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

பழமொழி

ஒரு குடும்பம் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் அவ்வீட்டின் பெரியோர்களே. பெற்றோர்கள் செய்யும் தவறானது அதனைப் பார்த்து வளரும் சந்ததியினர்களும்அதே  மனப்பான்மையோடு தான் வளர்க்கிறார்கள்.

சந்ததியினர்கள் திருந்த வேண்டும் என்றால் பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே ஒரு குடும்பமே நல்லவர்களாவதும் கெட்டவர்களாவதும் அந்த வீட்டின் பெரியவர்கள் கையில் தான் இருக்கிறது. எனவே குடும்பத்தை வழி நடத்தும் நாம் இதை உணர்ந்து நம் சந்ததியினருக்கு ஒரு நல் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நாமும் ஒரு சமூக அந்தஸ்தை பெற்று நலமாக வாழ்வோமே.

Victory King (VK)

No comments: