Tuesday, August 18, 2020

துஷ்டரைக் கண்டால் தூர விலகு!

 Status 315

துஷ்டனைக் கண்டால் தூர விலகு  

- பழமொழி 

நல்ல பாம்பு கடித்தால் விஷத்தை உடனே எடுத்து விட்டால் விஷம் இறங்கிவிடும். ஆபத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு  விடலாம்.ஆனால் கட்டுவிரியன் கடித்து விட்டால் விஷத்தை உடனே எடுத்தாலும் ஆபத்திலிருந்து அப்பொழுது விடுபட்டாலும் காலப்போக்கில் அதன் பாதிப்பு வந்து வந்து போகும். அடுத்தவர்களைஅழித்து வாழும் துரோகிகளும் குரோத எண்ணங்களே தங்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ள கயவர்களும் கட்டுவிரியனைவிட கொடூரமானவர்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து  ஒதுங்கி இருப்பது தான் நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு ஒரே வழி. அவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள். எனவே நாம் அவர்களிடமிருந்து விலகி நின்று நம்மை நாம் காத்து நலமுடன் வாழ்வோம்.

Victory King (VK)

No comments: