Sunday, August 30, 2020

ஊருடன் ஒத்து வாழ்!

 Status 327

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். 'ஊரோடு ஒத்துப்போ' என்று சொல்வார்கள்.  அப்படியில்லாமல், ஊருடன் பகைத்துக்கொண்டால், அவன் பரம்பரைக்கு தீங்கு நேரும். தம் வம்சமே அழிந்துவிட வாய்ப்புண்டு என்கிறார்.

கொன்றை வேந்தன்

ஒளவையின் இந்த அருள்வாக்கு பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய ஒன்று. அனைத்து தரப்பினர்களுக்கும் அனைத்து வயதினர்களுக்கும் பொருந்தும் ஒரு முத்தான பாடல். எனவே நாம் ஒவ்வொருவரும் இதனைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து ஆனந்தமாய் வாழ்வோமே!

Victory King (VK)

No comments: