Monday, August 3, 2020

தன் வினை தன்னைச்சுடும்!

Status 300

பட்டினத்தார் துறவு நிலையில் வீடு வீடாக உணவு பெற்று உண்டது கண்டு அவரது உறவினர்கள் சினமடைந்தனர். 

தங்கள் குலப்பெருமை இவரால் சீரழிகிறதே என்று ஒருநாள் அந்த உறவினர்கள் அப்பம் ஒன்றில் நஞ்சு கலந்து, அதை உண்ணும்படி பட்டினத்தாரிடம் தந்தனர்.

உண்மையை உணர்ந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை உண்ணவில்லை, 

‘தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்றபடி, அப்பம் கொடுத்த உறவினர் வீட்டுக் கூரை மீது அதை எறிந்தார். உடனே அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது. 

அதுபோல் நம்மை எவரேனும் துன்புறுத்தி அழிக்க நினைத்தால் அதனால் நம் ஆழ்மனது வெம்பி வேதனைப்படும் பொழுது நம் மனம் பட்ட வேதனையே நம்மை அழிக்க நினைத்தவனுடைய வாழ்வை சின்னாபின்னமாக்கி விடும் என்பதற்கு பட்டினத்தாரின் இந்தநிலையே ஒரு சான்றாகும்.

Victory King (VK)

No comments: