Tuesday, August 11, 2020

கிருஷ்ண ஜெயந்தி!

 Status 308

கிருஷ்ணர் கம்சனை அழிப்பதற்காகவும், மகாபாரதம் எனும் உன்னத காவியத்தில், நீதியை நிலை நாட்டுவதற்காகவும் அவதரித்தவர். மதுராவில் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த கம்சனை அவன் தங்கை தேவகியின் எட்டாவது குழந்தையான கிருஷ்ணன் கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து இளைஞன் ஆனதும் மதுராவுக்கு வந்து கம்சனை அழித்து மக்களைக் காத்தருளினார்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று நாம் மனமகிழ்ந்து நம் இல்லத்திற்கு வரவேற்று பலவகை தின்பண்டங்களையும் பால் பழங்களையும் உளமகிழுந்து உபசரித்து வணங்கினால் அவர் நம்மை காப்பதுடன் நமக்கு துரோகம் செய்யும் அசுர குணம் படைத்தவர்களையும்  வதம் செய்து நம்மை நலமுடன் வாழ வைப்பார்.அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Victory King (VK)

No comments: