Thursday, August 27, 2020

தீதும் நன்றும்!

 Status 324

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"

 பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"

"அடாது செய்பவன் படாத பாடுபடுவான்"

பழமொழிகள்

இப்படிப்பட்ட உயிருள்ள பழமொழிகளை நம் மனதில் ஏற்றிக் கொண்டுவிட்டால் தீங்கு செய்யும் எண்ணம் நமக்கு மேலோங்கும் பொழுதெல்லாம் இவை ஒரு கேடயமாக இருந்து நம்மை காப்பாற்றும். 

Victory King (VK)

No comments: