Saturday, August 1, 2020

அழுகையும் சிரிப்பும்!

Status 298

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன்

நாம் அழ வேண்டிய இடத்தில் அழுது, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தால் தான் நமது மனச்சுமை நீங்கி நாம் சகஜ நிலையில் இயங்க முடியும். சிரிப்பும் அழுகையும் உணர்ச்சிகளின் உச்சகட்ட வெளிப்பாடு. அதை அடக்கவோ மறைக்கவோ செய்தால் நம் உடல் நிலைதான் கெடும். எனவே மற்றவர்களுக்காக நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் நாம் நாமாகவே இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம்.

Victory King (VK)

No comments: