Friday, July 31, 2020

செய்வதை உணர்வோம்!

Status 298

கொல்லல் தீது!
திருடல் தீது
பொய் பேசல் தீது!
பழித்தல் தீது!
வம்புரைத்தல் தீது!
பொறாமை தீது!
பகை தீது!
பொய்க் கொள்கையைப் பற்றுதல் தீது!

புத்தர்

தீது என்று உணர்ந்தே தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் தம்மையும் அழித்துக்கொண்டு சந்ததியினரையும் அழிக்கின்றனர். தீது என்று தெரியாமல் தீமை செய்துவிட்டு உணர்ந்தவுடன் தன்னைத் திருத்திக் கொள்பவர்கள் தன்னலம் காப்பதுடன் சார்ந்தோரையும் காத்து வழி நடத்த முடிகிறது. தீதே நம்மை வந்து அடையா வண்ணம் தன்னை காத்து நன்மையே செய்து வருபவர்கள் அனைத்து விதத்திலும் நலம்பெற வாழ முடிகிறது. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்,வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற  கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு நலமாக வாழ்வோம்.

Victory king (VK)

No comments: