Sunday, July 19, 2020

பொய்யும் உண்மையும்!

Status 286

பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது.

சுவாமி விவேகானந்தர்

உண்மைக்கு ஒரு முகம்தான் ஆனால் போய்க்கோ பல முகங்கள். முகத்திரை விலகும் பொழுது பொய்யின் உண்மை சொரூபம் தெரிந்துவிடும். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்,
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்" கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகளை மனதில் கொண்டு எந்த நிலையிலும் பொய் பேசுவதை தவிர்த்து உண்மையே பேசி உயரடைவோமே.

Victory King (VK)

No comments: