Wednesday, July 8, 2020

நம் மதிப்பும் நம் செயல்களின் மதிப்பும்!

Status 275

 உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட, உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை அதுவே சிறந்த வாழ்க்கை.

அன்னை

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

எனவே நம்மைப் பற்றியும் நம் செயல்களைப் பற்றியும் சிறப்பாக மற்றவர்கள் கூறும் பொழுது தான் நம் மதிப்பு கூடும். நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் இயல்பாக அது மற்றவர்களுக்கு முறையாக சென்றடைய  செய்யும்பொழுது அழியா புகழ் நம்மை தேடி தானே வந்தடையும். நாம் புகழைத் தேடி அலைய வேண்டியதில்லை.

Victory king (VK)

No comments: