Saturday, July 18, 2020

விருந்தோம்பல்!

Status 285

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு உபசரிப்பவனது வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

குறள் எண் 84 (பொருள்)

விருந்தோம்பல் ஒரு கடமை அல்ல. வந்தோரை அகமகிழ்ந்து முகமலர்ந்து வரவேற்று, பாசத்துடன் பக்கத்தில் அமர்ந்து உள்ளன்புடன் உரையாடி, வருவோருக்கு ஏற்ப தயாரித்த உணவுகளை பரிவோடு பரிமாறி, அவர்கள் சுவைத்து உண்பதைக் கண்டு அகமகிழ்ந்து அன்போடு உபசரித்து, உண்டபின் பண்போடு அவர்கள் குடும்பத்தினரையும் விசாரித்து குதூகலத்துடன் அவருடைய வருகைக்கு நன்றி சொல்லி வாயில் வரை சென்று வாயார வாழ்த்தி வழி அனுப்புதல்தான் விருந்தோம்பலின் சிறப்பு. அதனால் ஏற்படும் புத்துணர்வை நாம் அனுபவிக்கும் பொழுதுதான் உணரமுடியும்.

Victory king (VK)

No comments: