Friday, July 3, 2020

உயிர்கள் மேல் அன்பு காட்டுங்கள்!

Status 270

உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்.செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

காஞ்சி மஹாபெரியவர்

ஆராய்ந்து அறிய ஆறாவது அறிவைப் பெற்ற பெருமை மனித குலத்திற்கு மட்டுமே உண்டு. அதனை நன்கு உணர்ந்து காஞ்சி மகா பெரியவர் மேலே கூறியது போல் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதும் அனைத்து ஜீவன்களிடத்தும் பாசத்தோடு உணவளிப்பதும் இயற்கைச் சூழலை பசுமையாக்க செடி கொடி மரங்களை செம்மை படுத்துவதும் நம் பண்பை வளர்ப்பதுடன் நாட்டையும் செம்மையாக்கும் நற்செயல் ஆகும். குருவின் மகிமையை அறிவோம். குருவை சரணம் அடைவோம்.

Victory king (VK)

No comments: