Tuesday, July 14, 2020

தீவினைக்கான பலன்

Status 281

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

புத்தர்

நாம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். அதுபோலத்தான் நாம் செய்யும் வினைகளுக்கேற்ப தான் விளைவுகளும். நாம் செய்யும் நற்செயல்களுக்கேற்ப  நம் வாழ்வில் அனைத்திலும் நன்மைகளை அடைவோம். அதில் சிறிது சறுக்கல் ஏற்பட்டாலும்  செய்த நற்செயலினால் அது தூள் தூளாகி விடும். அதுபோல் நாம் செய்யும் தீவினைகளிலிருந்து  தப்பவே முடியாது. அது நம்மை விரட்டி விரட்டி துன்புறுத்தாமல் விடாது. எனவே தீவினை துறந்து நல்வினையையே ஏற்று நலமுடன் வாழ்வோம்.

Victory king (VK)

No comments: