Wednesday, July 15, 2020

மனசாட்சியின் குரல்!

Status 282

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் 293(உரை)

தார்மீக பயம் இல்லாதவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தானாகவும் உணரமாட்டார்கள் மற்றவர்கள் எடுத்துரைத்தாலும் கவலைப்படாமல் தாம் செய்த தவறை நியாயப்படுத்த பல காரணங்களை உதிர்ப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை பண்பில்லாமல் வளர்க்கும் பொழுதுதான் அவர்களுக்கு தார்மீக பயம் விட்டுப் போகிறது. எனவேதான் அவர்கள் வாழ்க்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போய் தம் வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளின் நல்வாழ்வு பெற்றோரின் கையில் தான் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Victory king (VK)

No comments: