Friday, July 24, 2020

நல்வினையும் தீவினையும்!

Status 291

மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். நம் எண்ணங்கள் யாவும் பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

புத்தர்

இவற்றினை சிறிது சிந்தித்துப் பார்த்தால் பிறருக்கு நாம் தீமை நினைக்கும்பொழுதே நமக்கு வரும் தீமையை நம் மனம் நமக்கு எச்சரித்து  நன்மையே செய் இல்லையேல் நீ அல்லல்பட்டு அவமானப்படுவாய் என்று கட்டளையிட்டு நம்மை காப்பாற்றி வழி நடத்தும். எனவே தீவினையை துரத்தி நல்வினையே செய்து நலமாக வாழ்வோம்.

Victory King (VK)

No comments: