Thursday, July 30, 2020

மனமெனும் மாயசக்தி!

Status 297

சில குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் மனம்தான். அதிலிருந்து உன்னை காப்பாற்றுவதும் மனம்தான். உன்மனம் தான் உன்னுடைய உலகம், உன் மனம்தான் உன்னுடைய ஆரோக்கியம்.

ஓஷோ

நம்மால் அனைத்தும் முடியும், முடியாதது ஒன்றுமில்லை என்று நாம் எண்ணும் பொழுதும் சொல்லும் பொழுதும் மேலிருந்து அசரீரி என்னும் ஓர் சக்தி 'அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்' என்று நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருக்கும். அதன் பலன் நமக்கு மனோதிடத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். எனவேதான் எப்பொழுதும் நாம் நினைப்பதும் சொல்வதும் நல்லவையாகவே இருக்க வேண்டும் என்று கூறுவது. மனோபலமே தேகபலம். எனவே நமக்கு மனோபலம் இருந்தாலே நாம் ஆரோக்கியமாகவும் மகிழ்வோடும் இருப்போம்.

Victory King (VK)

No comments: