Tuesday, July 7, 2020

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!

Status 274

உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய்

சுவாமி விவேகானந்தர்

ஒருவர் நம்மைப் புகழந்து பேசும்பொழுது மனம் மகிழ்கிறது. அது ஆணவத்திற்கு அடிகோலுகிறது. ஆணவம் மிகும்பொழுது சுற்றத்தை இழக்கிறோம். சூழலை இழக்கிறோம். மற்றவர்களை அவமதிக்கிறோம். முடிவில் நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அதுபோல் நம்மைத் தாழ்த்தி பேசும் பொழுது மன வேதனையில் ஆத்திரப் படுகிறோம். ஆவேசப்படுகிறோம். நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை வந்து நம் உடலையும் வருத்தி மற்றவர்கள் முன் அவமானப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே இரண்டிற்குமே ஒரு முக்கியத்துவம் கொடுக்காது அமைதி காப்பதே நாம் நலமாக வாழ்வதற்கு ஒரே வழி.

Victory King (VK)

No comments: