Thursday, August 6, 2020

தானமும் தர்மமும்!

Status 303

உயிர் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

காஞ்சி மகாபெரியவர்.

தர்மம் என்பது எவரும் கேட்காமல்  அவர் நிலை அறிந்து நாமாகக் கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். இதை பாரதப்போரில் கர்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், ஈசன் கர்ணனுடைய தந்தை சூரிய தேவனிடம் கூறியது. தானம் குடும்பத்தை செழிக்க வைக்கும். தர்மத்தினால் கிடைத்த புண்ணியத்தின் பலன் ஏழேழு ஜென்மத்திலும் நிலைத்து நிற்கும். எனவே வாழ்க்கையில் தானதர்மங்கள் செய்து நாமும் நலமுடன் வாழ்ந்து நம்ம சந்ததியினரையும் வாழவைத்து மகிழ்வோம்.

Victory King (VK)

No comments: