Saturday, November 7, 2020

பிறப்பும் இறப்பும்!

 Status 394

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு, சுகம் சோகம், பாசம் பகைமை, நல்லவை தீயவை, லாபம் நஷ்டம், சினேகம் குரோதம் அனைத்தையும் சந்தித்துத்தான் நம் வாழ்க்கை படகில் பயணிக்கிறோம். இதில் ஒருவர் இறந்த பிறகு ஒரு அன்னப் பறவை பாலுடன் கலந்த தண்ணீரை விலக்கி பாலை மட்டும் பருகுவது போல் அவர்களுடைய நல்லவைகளை மட்டும் நினைவில் கொண்டு அவர்களின் புகழை பறைசாற்றுவது தான் பண்பு. அதை விடுத்து இறந்த பிறகும் அவர்களுடைய தீயவைகளை மட்டும்  மனதிற்கொண்டு அதை அப்படியே வம்சாவழிகளுக்கும் பரப்பி அவர்கள் வாழ்க்கையையும் சூனியம் ஆக்காமல் வாழப் பழகுவோம்.

Victory King (VK)

No comments: