Friday, November 6, 2020

நல்லதையே நினைப்போம், நலமாக வாழ்வோம்!

 Status 393 

பழுத்துக் கனிந்த பழம் தரையில் விழுந்துதான் தீர வேண்டும். அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆக வேண்டும் இறப்பது நிச்சயம், இருப்பது நிச்சயமில்லை. 

- ஸ்ரீ ராமர்

அடுத்த நிமிடம் நாம் இருப்போமா இல்லையா என்பதே தெரியாத நிலையில் நம்மிடம் போட்டி பொறாமை குரோதம் அடுத்தவனை அழித்து பிழைத்தல் போன்ற கொடூர குணங்களால் நாம் இறந்த பிறகு நம்  வம்சத்திற்குத் தான் அழிவு என்பதையும் உணராமல் வாழ்ந்து தான் என்ன பயன். நாம் உயிரோடு இருக்கும் நிமிடம்வரை நல்லவற்றையே நினைத்து நன்மைகளையே செய்து நலமாக வாழ்வோமே!

Victory King (VK)

No comments: