Friday, November 20, 2020

அராஜகத்தின் உச்சகட்டம் அழிவு!

 Status 407

சூரபத்மன் என்னும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் முருகனைப் படைத்தார். அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள். தனது சக்தியை அதில் உருவேற்றி,  அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள். முருகனும் அந்த வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார்சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப்  பிளந்தார். அராஜகம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இந்த உண்மையைத்தான் சூரசம்கார நிகழ்வு நமக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது. எனவே அராஜகத்தின் உச்சக்கட்டம் அழிவுதான் என்பதை நாம் நன்கு உணர வேண்டும்

Victory King (VK)

No comments: