Wednesday, November 11, 2020

கீதாச்சாரம்!

Status-398

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோஅது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோஅது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- கீதாச்சாரம்.

எனவே நாம் கவலையை மறந்து கடமையை செய்து கருணை நெஞ்சத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தால் நலமான வாழ்க்கை நம்மை வந்து அடையும்.

Victory King (VK)



No comments: