Sunday, September 20, 2020

கோழிக்குத்தி வானமுட்டி பெருமாள்!

 Status 348

ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் செய்த வானமுட்டி பெருமாள் கோழிக்குத்தி  என்ற கிராமத்தில் அத்திவரதராக விஸ்வரூப தரிசனம் அருள்கிறார்.

'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்றும் சனி தோஷம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள் பக்தர்கள். 

இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மூவலூரிலிருந்து வலது பக்கம் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வானமுட்டி பெருமாள் என்ற அத்திவரதரை தரிசித்து பயனடைவோம்.

Victory king (VK)


No comments: