Thursday, September 17, 2020

குறையும் நிறையும்!

 Status 345

இந்த உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்ததும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.

சாணக்கியர்

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. இதில் நானோ நீங்களோ விதிவிலக்கல்ல. நல்லவைகள் நடக்கும் பொழுது சந்தோஷப்படுவது போல் துன்பங்கள் வரும் பொழுது அதனை கண்டு துவளாமல் இதுவும் கடந்து போகும் என்று மனதார எண்ணி இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தால் நாம் எக்காலத்தும் நிம்மதியாக வாழ முடியும்.

Victory king (VK)

No comments: