Tuesday, September 15, 2020

நாவடக்கம்!

 Status 343

ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் ஆற்றல்மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.

புத்தர்

ஆயுதங்களால் ஏற்படும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும் என்பது ஒரு பழமொழி. நாவை நம் கண்ட்ரோலில் வைத்திருந்தால் அதைவிட உயர்ந்தது ஒன்றுமில்லை. நாவின் கண்ட்ரோலில் நாம் இருந்தால் அதைவிட தீயதும் ஒன்றுமில்லை. எங்கும் எப்போதும் எவரிடத்திலும் நாம் நாவடக்கத்தோடு பேசினால் நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறராலும் போற்றப்படுவோம்.

VictoryKing (VK)

No comments: