Friday, September 4, 2020

துரோகத்தின் சம்பளம் தண்டனை!

 Status 332

நமக்கு துரோகம் செய்பவர்களை அன்பால், பண்பால் திருத்தலாம் என்று முயற்சித்தாலும் அவர்கள் திருந்தாமல் மேலும் மேலும் தன் துரோகச் செயலை செய்து கொண்டே இருநதால் அவர்களுக்கு அழிவு காலம் மிகவும் அருகில் வந்துவிட்டது என்றுதான் பொருள். கடவுள் அவர்கள் துரோகத்தை பார்த்து பார்த்து திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களையும் கொடுத்து கடைசியில் கடுமையான தண்டனையினால் திருத்த முடியும் என்ற ஒரு முடிவுக்கு வந்து அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கிவிடும். குற்றம் செய்பவர்கள் குற்றத்தை உணர்ந்து திருந்தவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை சூனியம் தான். எனவே நமக்கு துரோகம் செய்தவர்களை எண்ணி எண்ணி மனம் வருந்துவதை விடுத்து நம் தீராத துயரத்தை முறையிட்டு இறைவனை சரணடைந்தால் வெற்றி நமக்குத்தான்.

Victory king (VK)

No comments: