Thursday, September 3, 2020

யாரையும் இழிவாக கருத வேண்டாமே!

 Status 331

அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது.யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

காஞ்சி மகாபெரியவர்

நமது பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். அடுத்தவர்கள் வேலைகளை குறை சொல்லியும் அவர்களை இகழ்ந்து பேசியும் நாம் சிறந்தவர் என்று பறைசாற்றிக்  கொண்டால் அது நிலைத்து நிற்காது. அதனால் நாம் அடையும் கோபங்கள் மற்றவர்களையும் கோபப்படுத்துவதுடன் நம்மையும் நாம் அழித்துக் கொள்கிறோம். எனவே நாம் செய்யும் செயல்களை செவ்வனே செய்வோம். மற்றவர்களையும் பாராட்டுவோம். மகிழ்வோடு இருப்போம்.

Victory King (VK)


No comments: