Saturday, September 19, 2020

சிந்திப்போம் செயல்படுவோம்!

 Status 347

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணி விடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி

புத்தர்

ஒருவர் பேசும் பொழுது நாமும் அதனுடனே பேசினாலோ அவர் பேசி முடிப்பதற்குள் நாம் பேச ஆரம்பித்தாலோ வந்தவர் கருத்தையும் நாம் சொல்ல நினைக்கும் கருத்தையும் இருவருமே புரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே அமைதியாக இருந்து அடுத்தவர் பேசுவதை நிதானமாக கேட்டு அதற்கு தகுந்தார் போல் நாம் பேசும் போது தான் அந்த உரையாடலுக்கு ஒரு உயிர் கிடைக்கும். பொதுவாகவே நாம் பேச்சைக் குறைத்து நன்கு சிந்திப்பதில் கவனம் செலுத்தி ஒரு செயலை செய்யும் பொழுது அது முழுமையாக வெற்றி பெறும்.. எனவே சிந்திப்பதில் கவனம் செலுத்துவோம். எண்ணிய செயல்களை எளிதாக முடிப்போம்.

Victory king (VK)

No comments: