Monday, September 21, 2020

முடிந்ததை செய்வோமே!

 Status 349

நம்மை நம்பி வந்தவருக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அன்புடனும் பண்புடனும் பேசி ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லி அவர்கள் நலனை விசாரித்து நம்மால் என்ன முடிந்ததோ அதை அளித்து வாயார வாழ்த்தி வழியனுப்பினாலே அவர்கள் அகமகிழ்ந்து நம்மை வாழ்த்தி வணங்கி விடை பெறுவார்கள். முடிந்ததை முகமலர்ச்சியுடன் செய்து நாமும் அகமகிழ்வோமே!

Victory king (VK)

No comments: