Sunday, October 18, 2020

எதிர்காலத்துக்காக சிந்திப்போமே!

Status 374

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்களாகும்

சாணக்கியர்

வயதான காலத்தில் மனைவி-கணவனை இழப்பதும் கணவன்-மனைவியை இழப்பதும் துரதிஷ்டவசமானது என்றாலும் நமது விதிப்படி கர்மவினையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும. ஆனால் நாம் நல்ல நிலையிலேயே இருக்கும் பொழுது அனைவரையும் நம்பி பணத்தை இழப்பதும் தனக்கென பணத்தை சேமித்து வைக்காமல் இருப்பதும்தான் நாம் செய்யும் மகா தவறு. இதுதான் உண்மையிலேயே துரதிஷ்டமானது. எனவே முதுமையில் கவலையின்றி இருக்க நம்மை நாம் காத்துக்கொள்ள மற்றவர்கள் நம்மை மதிக்க நாம் நலமுடனும் வளமுடனும் இருக்கும்பொழுதே நமக்காகவும் ஓரளவு பணத்தை சேமித்து வைத்துக்கொள்வதுதான் நமக்குப் பெருமை.

Victory King (VK)

No comments: