Friday, October 30, 2020

உறவுச் சங்கிலி விடுபடாமல் இருக்க!

 Status 386

உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான் பிறகு  குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும். ஆனால் தற்கால வாழ்க்கை முறையில் சில பல காரணங்களினால் இன்றையஇளைய தலைமுறைகள் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வளரும் முறை. சிறுவயதிலிருந்தே உறவுகளின் மேன்மையை சொல்லி வளர்காததால் வந்த விளைவுதான் இது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் உறவு சங்கிலி விடுபடாமல் இருக்க வாய்ப்புண்டு.

Victory King (VK)

No comments: