Monday, October 19, 2020

திருமாலின் அவதாரங்கள்!

 Status 375

திருமால் மச்சாவதாரத்தில், சோமுகாசுரன் திருடிச்சென்ற வேதங்களை  திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 

வராக அவதாரத்தில் இரண்யாட்சன் என்ற அசுரனை   பூமியை தோண்டிச் சென்று அவனை அழித்தார்.  

நரசிம்ம அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்ற இரண்யனைக் கொன்றார். 

ராமாவதாரம் எடுத்து தலைக்கனத்தால் தகாத செயல்களை செய்து வந்த சிவபக்தனான ராவணனையே வதம் செய்தார்.

எனவே இந்த கலியுகத்தில் சுயநலத்திற்காக அடுத்தவர் குடும்பங்களை அழித்து அடாத செயல்களில் ஈடுபட்டு வரும் கயவர்களை இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து  அவர்கள் குடும்பத்தை அழிப்பது உறுதி.

Victory King (VK)

No comments: