Thursday, October 22, 2020

கடந்து வந்த பாதையை மறவோம்!

Status 378

 நாம் பிறக்க காரணமானவர், நாம் கல்வி கற்க உதவியவர், அல்லல்படும் நேரத்தில் உணவு அளித்தவர், ஆபத்துக்காலத்தில் நம்மோடு இருந்தவர், தன்னை மறந்து நம்மை நேசித்தவர் இவர்கள் அனைவரும் நமக்கு தந்தையே. இவர்களுக்குச் செய்யும்  நன்றிக்கடன் ஆயிரம் தெய்வங்களுக்குச் செய்யும்தொண்டினை விட மேலானது.

சாணக்கியர்

நாம் ஏழ்மை நிலையிலிருந்து இந்த உயர்நிலை அடைவதற்கு நாம் கடந்து வந்த பாதையில் தடுமாறும் பொழுது நம்மை தூக்கி நிறுத்தியவர்களையும் வறுமையில் வாடும் பொழுது ஆறுதல் சொல்லி அரவணைத்தவர்களையும் ஊக்கம் அளித்து நம்மை உயர்த்தியவர் களையும்  மனதார நினைவில் பதித்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் தடம் மாறாமல் இடர்பாடுகள் இல்லாமல் இனிதே கடக்க முடியும். நம் நிகழ்காலமும் எதிர்காலமும் நாம் கடந்து வந்த பாதையின் உயிர்நாடி என்பதை நாம் உணர வேண்டும்.

Victory King (VK)

No comments: