Wednesday, October 28, 2020

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்!

 Status 384

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 

பொருள்: ஊரை பகைத்தால் அடியோடு அழிய நேரிடும்

கொன்றை வேந்தன்

அனைவரையும் அரவணைத்து வாழ்வதுதான் கற்றவர்களுக்கான பண்பு. அதை விடுத்து சுயநலம் மிகுதியால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கெடுதல் செய்தல், அவர்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அனைத்து செயல்களில் ஈடுபடுதல் இவ்வாறான தீய செயல்களை செய்பவர்களின் குடும்பமே வேரோடு அழிந்து விடும் என்பதை அன்றே ஔவையார் தன்னுடைய கொன்றைவேந்தன் நூலில் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். நீதி நூல்களை மதிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

Victory King(VK)

No comments: