Monday, October 12, 2020

புயலும் பூந்தென்றலும்!

 Status 369

நேற்றைய புயலை நினைத்து இன்றைய பூந்தென்றலுக்காக ஜன்னல்களை அடைக்க மாட்டான் புத்திசாலி.

சாணக்கியர்

புயலுக்காக அடைக்கப்பட்ட ஜன்னல்களினால் நடப்பதை அறிய முடியாத சுயநலவாதிகள் இன்றைய பூந்தென்றலையும் அனுபவிக்க முடியாமல்  புயலையே நினைத்து நினைத்து புழுங்கி புத்தி பேதளிப்பதுதான் மிஞ்சும். எனவே பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளாமல் இயற்கையோடும் நம்மை சார்ந்தவர்களோடும் சேர்ந்து வாழப் பழகுவோமே!

Victory King (VK)

No comments: