Wednesday, October 14, 2020

தீயவை விலகி நல்லவை அணுக!

 Status 371

மறந்தும்கூட மற்றவர்களுக்கு கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

(குறள் 204)

தீயவற்றைப் பார்க்காதே! தீயவற்றைப் பேசாதே! தீயவற்றைக் கேட்காதே!  தீயவற்றிலிருந்து நாம் விலகியிருந்தாலே போதும். நல்லவைகள் தானாய் நம்மை வந்தடையும் என்பதுதான் காந்தியடிகள் தெரிவிக்க விரும்பிய சித்தாந்தம்.

இதற்கு மேலும் அடுத்தவர்களுக்கு தீங்கிழைத்து தாம் மட்டும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. எனவே சிந்திப்போம். சிறப்பான வாழ்க்கையை அனுபவிப்போம்.

Victory King (VK)

No comments: