Monday, October 26, 2020

கர்வம் அடக்குவோம்!

 Status 382

இந்த விஜயதசமி நன்னாளில் நாம் சரஸ்வதி தேவியை வணங்கி கற்றவர் கல்லாதவர்களுக்கு கற்பித்தல் வேண்டும் அத்துடன் தங்கள் அறிவை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் எல்லாம் கற்று விட்டோம்அனைத்தும் நமக்குத் தெரியும் என்ற மமதையில் இருப்பவர்களுக்கு ஒளவை பாட்டி  "கலைமகளே தான் கற்றது கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை" என்று கூறுகிறாள். எனவே நாம் நம் கர்வத்தை அடக்கி  அறிவை மென்மேலும் வளர்த்து நாமும் பயன் அடைவோம் மற்றவர்களும் பயனடையச் செய்வோம். கல்விக்கு இல்லை எல்லை என்பதை உணர்வோம்.

Victory King (VK)

No comments: