Saturday, December 26, 2020

வாழ்ந்து சாதிப்போம்!

 Status 441

"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்....."

கவிஞர் கண்ணதாசன்

நமக்கு கவலை இருக்கலாம்; கடன் இருக்கலாம் ஏமாற்றும்; எத்தர்கள் இருக்கலாம்; நம்மை அவமானப்படுத்த துடிக்கும் துரோகிகள் இருக்கலாம்; கூடவே இருந்து குழி பறிக்கும் கயவர்கள் இருக்கலாம்;  எல்லா உதவிகளையும் நம்மிடம் பெற்றுக்கொண்டு பொல்லாங்கு கூறித் திரியும் உறவினர்களும் கூட இருக்கலாம். ஆனால் நாம்தான் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமே ஒழிய எதற்காகவும் எவருக்காகவும் நாம் நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது.

‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு, வாழ்வதற்காகவே நமக்குக் கொடுத்த இந்த அறிய பிறவியை வாழ்ந்து மகிழ்வோம்; வாழ்ந்தே சாதிப்போம்.

Victory King (VK)

No comments: