Tuesday, December 22, 2020

உண்மையின் மதிப்பு!

 Status 437

பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

சுவாமி விவேகானந்தர்

‘பாம்பாட்டிக்கு பாம்பால் தான் சாவு’ என்று சொல்வார்கள். அதுபோல் பொய்யாலே பிழைப்பை நடத்துபவர்கள் தன் இனத்தைச் சேர்ந்த பொய்யர்களாலேயே தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வார்கள். பொய்யானது நம்மை துரத்தும் இரை தேடும் புலி. அது நம்மை அடித்து குதறாமல் விடாது. எனவே நாம் "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் நம்மை மதிக்கும்" என்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு மருந்திற்கும் பொய் பேசாமல் எப்பொழுதும் உண்மையே பேசி நம் வாழ்வை ஒளிமயமாக்குவோமே!

Victory King (VK)

No comments: