Friday, December 11, 2020

பாரதியை போற்றுவோம்!

 Status 426

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே  எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம்

பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.

- மகாகவி பாரதியார்.

எனவே நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கவும், மேலும் மேலும் பாவ காரியங்களை செய்யாமல் இருக்கவும், நாம் அன்னையிடம் ஆத்ம சுத்தியுடன் வேண்டினால் நம் பாவங்கள் நீங்குவதோடு நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இருக்காது.

Victory King (VK)

No comments: