Thursday, December 3, 2020

பிரார்த்தனையின் பலன்!

 Status 418

என்னதான் பிரார்த்தனை என்ற பெயரில் நாம் கடவுளிடம் மனம் உருகி வேண்டினாலும், அதற்கான ஹோமங்களை வீட்டில் ஊர் மெச்சம் அளவிற்கு செய்தாலும், நாம் நினைப்பதும் வேண்டுதலும் நியாயமானதாக இல்லையென்றால், தற்சமயம் நமது வேண்டுதல்கள் பலிப்பது போல் தோன்றினாலும் எண்ணத்தின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கும். ஆனானப்பட்ட தீவிர சிவபக்தனான இராவணனையே ராமர் வதம் செய்ததும் , சிவனிடம் வேண்டி பெற்ற வரத்தினை தன் தீவினையினாலும் அகம்பாவத்தினாலும் அதனைக் கெடுத்துக் கொண்ட சூரனை முருகன் வதம் செய்ததும் தெரிந்திருந்தும், பணத்தினாலும் போலி பக்தியினாலும் நாம் எதையும் வென்று விடலாம் என்ற நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நம் வாழ்க்கை பரமபதத்தில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட நிலைதான். எனவே பக்தியின் புனிதத்தை கெடுக்காமல் உள்ளத் தூய்மையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு

Victory King (VK)

No comments: