Monday, December 30, 2019

சேர்க்கை!

நல்லவர்களும் சில குறைபாடு உள்ளவர்களாய் இருப்பதற்குக் காரணம் சேர்க்கைதான். ஆகவே எவருக்கும் சேர்க்கை நல்ல சேர்க்கையாய் இருக்க வேண்டும்.  ‘சத் சங்கம்’ வேண்டும் என்று சாஸ்த்திரம் விதித்திருப்பது இதற்காகத்தான்.

- இந்து தர்மசாஸ்த்திரம்

மழை நீர் மிகவும் சுத்தமானது. அதை நாம் சேகரித்து வைத்தால் பயனுள்ளதாக்கலாம். இல்லையேல் கழிவு நீர் பாதையில் சென்று அதோடு ஒன்றிவிடும். அதுபோல கிடைப்பதற்கரிய பிறவி மானுடப் பிறவி. அதை பயனுள்ளதாக்க வேண்டுமென்றால் நல்லோர் நட்பினால் மட்டுமே முடியும். எனவே, நல்லோர் நட்பைப் பெற்று தீயவர் நட்பை  நாடி செல்வதை துறந்து வாழ்வை வளமாக்குவோம். 'கூடா நட்பு கேடாய்தான் முடியும்’

- Victory King (VK)


No comments: