Friday, December 27, 2019

அகங்காரத்தின் தன்மை!

ஒருவனது அழகை கிழட்டுத் தன்மையும், தைரியத்தை பயமும், தர்மத்தை பொறாமையும், சம்பத்தை கோபமும், நல்ல நடத்தையை கெட்ட சேர்க்கையும், வெட்கத்தை காமமும் அபகரிக்கும். அகங்காரம் அனைத்தையுமே அபகரித்து விடும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

நமக்கு அகங்காரம் மட்டும் வந்துவிட்டால் மதம் பிடித்த யானையின் நிலைதான். சுற்றத்தை அழிக்கும், சூழலை அழிக்கும், கற்றதினால் ஏற்பட்ட நன்மைகளை அழிக்கும், முடிவில் நம் வாழ்க்கையையே அழித்துவிடும். எனவே எந்த நிலையிலும் அகங்காரத்தை நாம் நம்மை அண்டவிடாமல் தடுத்து வாழ முயல்வோமே.

- Victory king (VK)

No comments: