Saturday, December 21, 2019

சுற்றம் சூழ வாழ்வோமே!

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தார் சூழ வாழ்வதே செல்வம் பெற்றதனால் உண்டாகும் பயனாகும்.

- திருக்குறள் 524

நம் வாழ்வில் நம் நிலை உயரலாம், நம் பிள்ளைகள் நிலை உயரலாம், மகிழ்வான வாழ்க்கை மிகுந்து அமையலாம். ஆனால் நம் சொந்தங்களை எந்த நிலையிலும் ஒதுக்கி வாழ நினைத்தலாகாது. அனைத்து சுகங்களுமே வந்துபோகும். எனவே, சொந்தங்களை இழந்து பந்தங்களை நீக்கி வாழாத மனநிலை வர வேண்டும். மனம் நினைத்தால் மார்க்கமுண்டு.

- Victory King (VK)




No comments: