Monday, December 23, 2019

உண்மையும் பொய்யும்!


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய் சொல்லமை என்னும் அறத்தை இடைவிடாமல் பின்பற்றி நடந்தால் பிற அறங்களை செய்யாவிடினும் நன்மை உண்டாகும்.

- திருக்குறள் 297

பொய் ஒரு பன்முகம் கொண்டது. அது ஒரு போதை. ஒருமுறை பொய் சொன்னால் பொய்க்கு மேல் பொய்க்கு மேல் என்று பொய்யையே பேசி வாழ்க்கையே பொய் ஆகிவிடும். ஆனால் உண்மைக்கு ஒரு முகம்தான். உண்மை என்பது எப்பொழுது சொன்னாலும் உண்மை உண்மைதான். அதில் மாற்றமே இருக்காது. எனவே பொய் என்ற போதைக்கு அடிமையாகாமல் வாழ்வது நமது கடமை.

- Victory King (VK)

No comments: